Saturday, November 28, 2009

2012(ருத்ரம்) பகுதி 2 - செய்தியாளர்கள் மற்றும் தத்துவம்

பெரிய அளவிற்கு எதிர்பார்த்த வெற்றியைப் பெறாவிட்டாலும் இந்தப் படத்திலிருந்து சில காட்சிகள் - என்னைக் கவர்ந்தவை.

படத்தைப் பற்றி இங்கே படிக்கலாம்.

நியூஸ் ரிப்போர்ட்டிங்:
உலகம் அழியப் போவது பற்றி விஞ்ஞானிகள் கண்டுபிடித்துவிடுகிறார்கள். அந்த இரகசியத் தகவலை வெளியே சொல்ல முயற்சிப்பவர்கள் தொடர்ச்சியாகக் கொல்லப்படுகிறார்கள். ஏனென்றால், அரசு எடுத்துவரும் இரகசிய (தப்பிக்கும்) திட்டங்கள் வெளிப்பட்டுவிடக்கூடாது - அதற்காக.

இந்த விவரங்களையெல்லாம் தெரிந்துகொள்ளும் 'சார்லி' என்கிற கதாப்பாத்திரம் மக்களுக்கு அதைத் தெரிவிக்க, தானே ஒரு FM சேனலை நடத்துகிறான்(எத்தனை பேர் அதைக் கவனிக்கிறார்கள் என்று தெரியவில்லை!). உலகம் எப்படி அழியப்போகிறது என்பதை படங்கள் போட்டு விளக்கி இணையத்தில் வெளியிடுகிறான்(ஆனால் இவனை யாரும் கண்டுகொள்வதில்லை என்பது ஒருபுறம்). எங்கிருந்து உலக அழிவு ஆரம்பிக்கப்போகிறது என்பதைத் தெரிந்துகொண்டு அங்கு சென்று நேரடியாக ரிப்போர்ட் தர ஆரம்பிக்கிறான். அந்த இடத்தில் வெடிக்கும் ஒரு மிகப்பெரிய எரிமலைதான் எல்லாவற்றிற்கும் தொடக்கம் என்பதை மக்களுக்கு அறிவிக்கிறான். அப்படி அறிவிக்கும்போது அவன் முகத்தில் தோன்றும் ஒரு பிரகாசம்(அழகு).



படம்: யுடியூபில் ஏதோ ஒரு விடியோவில் இருந்து சுட்டது.

'இந்தச் செய்தியை உலகுக்கு முதலில் அறிவித்தது உங்கள் சார்லி' என்று அவன் சொல்லும்போது முகத்திலிருக்கும் அந்த கர்வம், எல்லா செய்தியாளர்களுக்கும் இருக்க வேண்டியது(உண்மையைச் சொல்லும் இடத்தில்). செய்தி எல்லோருக்கும் எட்டத்தான் போகிறது, ஆனால் அதை முதலில் தெரிந்துகொண்டது யார் என்பதுதான் இங்கே அறிவுஜீவிகளை உருவாக்குகிறதோ?

ஜென் தத்துவம்:
ஓஷோவின் 'வெறும் கோப்பை' என்ற புத்தகத்தில் வரும் முதல் ஜென் கதை. கற்பனையில் விரிந்ததை அப்படியே திரையில் கொண்டுவிந்திருக்கிறார்கள் படத்தில். உலகம் அழியப்போகிறதைப் பற்றி பதட்டத்தில், பயத்தில் தனது குருவிடம் வந்து சொல்கிறான் சீடன். குரு சிரித்துக்கொண்டே ஜாடியில் இருக்கும் பானத்தைக் கோப்பையில் நிரப்புகிறார்; நிரம்பிய பின்னும் வழிய வழிய ஊற்றுகிறார். சீடன் கத்துகிறான் 'குருவே கோப்பை நிரம்பிவிட்டது, உங்களுக்கு போதம் கெட்டுவிட்டதா?' என்று. குரு சொல்கிறார் 'நீ இப்படி பலவித விருப்ங்களில்(ஆப்ஷன்) நிரம்பி வழிகிறாய், உன்னிடம் எப்படி என் கருத்தைச் சொல்வது? முதலில் உன் மனதில் உள்ளவற்றைக் கொட்டிவிட்டு, பின்பு வந்து என் கருத்தைக் கேள்' என்கிறார்.

படத்தில் இது ஒரு அழகான கவிதைபோல் இடைச்செருகப்பட்டிருக்கும். நன்றாகவும் இருக்கும்.

3 comments:

Kumky said...

ஜென் கதை அருமை.
தொடரலாம்..

ஊர்சுற்றி said...

நன்றி கும்க்கி அண்ணே!

ஊர்சுற்றி said...

தமிழிஷில் குத்தினவங்களுக்கு நன்றி நன்றி.