Sunday, July 20, 2008

நள்ளிரவில் சைக்கிளில் ஏ.ஆர்.ரகுமான்...

துரைப்பாக்கம் - பல்லாவரம் சாலை, இரவு மணி 12:30. IT நிறுவன வாகனங்களின் அணிவகுப்பு இல்லாத அந்த நேரத்தில் ஒரு சில வினாடிகளில் எடுத்த முடிவு அது. ரோந்தில் இருந்த ஒரு காவல் அதிகாரி, டாஸ்மாக் கடை உண்மையாகவே பூட்டியுள்ளதா என கவனித்துவிட்டு டயூட்டியைத் தொடர, சற்று தூரத்தில் வாடகைக்கு விடுவதற்காக கட்டிவிடப்பட்டிருந்த கட்டடம் சுற்றியுள்ள ஏரியாவை மிரட்டிக்கொண்டிருக்க, என் பயணம் தொடர்ந்தது.

என்னை இந்த வழியாக இழுத்து வந்தது எது? மனதின் அமைதியா? நள்ளிரவின் நிசப்தமா? அல்லது அதோ அந்த புகை மூட்டத்தால் மங்கிவிட்ட முழு நிலவின் வெளிச்சமா?

எதுவாயினும் இந்த நள்ளிரவில் மனதைக் கவர்ந்த ஒரு சில ஏ.ஆர்.ரகுமானின் பாடல்களை சைக்கிளில் சென்று கொண்டே ரசிப்பதற்கு ஒரு வாய்ப்பு கிடைத்ததே!

இன்னொரு முறை எப்போது வாய்க்குமோ?!

மழை பெய்திருந்தால் இந்த பயணம் இன்னும் அழகானதாய் மாறியிருந்திருக்குமே?!!!

Friday, July 18, 2008

இப்போதைக்கு புதிய பதிவன்

நெடுநாட்களுக்கு பிறகு மீண்டும் பதிவெழுத வந்துள்ளேன்..... ஒரு பழைய வலையுலக வாசகன், இப்போதைக்கு புதிய பதிவன்.