தினமும் நான்கைந்து மின்னஞ்சல்கள், ஏழெட்டு குறுஞ்செய்திகள் - நடிகர் விஜயைக் கலாய்த்து வராவிட்டால் அன்றைய பொழுதில் ஏதேனும் பிழையோ என்று எண்ணத் தோன்றுகிறது. அந்த அளவிற்கு மின் ஊடகங்களில் விஜய் பற்றி ஏகப்பட்ட கதைகள், துணுக்குகள், கிண்டல்கள்.
இவற்றை உட்கார்ந்து பொறுமையாகத் தயாரிப்பவர்கள், யோசிப்பவர்கள் ஏன எத்தனைபேர் தங்கள் பொன்னான(!) நேரத்தைச் செலவிடுகிறார்கள். ஏன் இவர்களுக்கு இந்த ஆர்வம்? விஜய் பற்றி கடுமையாகக் கிண்டலடித்து குறுஞ்செய்தி அனுப்புவதிலோ, அல்லது மின்னஞ்சல் அனுப்புவதிலோ இவர்களுக்கு என்ன இன்பம் கிடைக்கிறது?!
- தமிழகத்தில் தனக்கென அதிக ரசிகர்களைக் கொண்ட நடிகர்
- ஒருசில ப்ளாப்புகள் கொடுத்த நேரத்திலும் மற்ற நடிகர்களைப் போல் மார்க்கெட் சாயவில்லை
- அரசியலுக்கு வரலாம் என்று தகவல் வெளியானதுமே பரபரப்பானது பத்திரிகை உலகம்
- நன்றாக நடிக்கத் தெரியாதவர் என்று விமர்சிக்கப்படுபவர்
- மூன்றாம் தலைமுறை நடிகர்களில் முதலில் டாகடர் பட்டம் பெற்றவர்
இப்படி எத்தனையோ முகங்கள் நடிகர் விஜய்க்கு. இவற்றில் பெரும்பாலாக கிண்டலடிக்கப்படுபவை, விஜயின் நடிப்பு, டாக்டர் பட்டம் மற்றும் அரசியல். இந்த மூன்றிலும் விஜயை விட பல படிகள் மேலே கிண்டல் அடிக்கப்படவேண்டிய பிரபலங்கள் நம் தமிழகத்திலேயே உண்டு. அவர்களை விட்டு விட்டு, விஜய் மேல் மட்டும் அதிகம் தாக்குதல் நடத்தப்படுவதற்குக் காரணம் என்ன?
விஜய் பற்றி கிண்டலடித்து வரும் மின்-செய்திகளில் வெறும் கிண்டல் மட்டும் இல்லாமல் ஒருவித கடுப்புணர்வு(காண்டு) இருப்பதை நன்றாகக் காணமுடிகிறது. அது ஏன்?
விஜய் பற்றி பகடையடித்து பரவிவரும் விசயங்களில், கடந்த ஒருமாதமாகவே சற்று அதிகமான தாக்குதல் இருப்பதையும் உணரமுடிகிறது(வேட்டைக்காரன் கூடிய விரைவில் வெளவிரவிருப்பதால் இருக்குமோ?).
விஜய் பற்றி நையாண்டி செய்யப்படும் குறுஞ்செய்திகள், மின்னஞ்சல்கள், யூடியூப் விடியோக்கள் - இவற்றை மெனக்கெட்டுத் தயாரிப்பவர்களின் மனநிலை என்னவாக இருக்கும்?
''சூர்யா மாதிரி சிக்ஸ் பேக் கிடையாது, அஜித் மாதிரி தன் திறமையால் சினிமா உலகத்திற்குள் நுழையவில்லை, விக்ரம் மாதிரி பல கெட்-அப் கிடையாது, படங்கள் கூட அப்பப்போ பிளாப் ஆகுது - இருந்தாலும் இவனுக்கு எப்படிய்யா இத்தனை ரசிகர்கள்?'' இந்த மாதிரியான எண்ணமாக இருக்குமோ?!!!
ஒரு விசயம்:
அந்த வன்முறை பின்னூட்டங்களில் வெளிப்படுவதைத் தவிர்க்க பின்னூட்ட மட்டுறுத்தல் செய்யப்படுகிறது.














