Wednesday, December 4, 2013

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்டி ஆக்கிரமிப்பு!!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே செய்தித் தாள்களிலும், வலைப்பூக்களிலும் பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஆதங்கத்தில் எழுதப்பட்ட இடுகைகள் சில...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (நவ, 2009)
http://haripandi.blogspot.in/2009/11/blog-post_09.html

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! (மார்ச், 2010)
http://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு (2012) - விளக்கப் படங்களுடன் சிறப்பான பதிவு
http://www.raguc.com/2012/06/blog-post.html

செய்திகள் சில:
நவ, 2013-ல் வெளியான ஒரு செய்தி
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=843291

//முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.//

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி (யாரிடமிருந்து மீட்க?)
http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1539543.ece

//சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.
2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.//

5 கோடி ரூபாய்க்கு என்ன பண்ணினாங்கன்னு கேட்காதீங்க! என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னும் கேட்காதீங்க! இனிமே என்ன பண்ணுவாங்கன்னும் கேட்காதீங்க.

பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு-க்கு செலவு பணிணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க(உறைவிட மேம்பாடு, ஆராய்ச்சி - அப்படி எதுவும் நடக்குதா என்ன?). பழைய அறிவிப்புப் பலகைகளுக்குக் கொஞ்சதூரம் தள்ளி , சில புது அறிவிப்புப் பலகைகளை வைச்சிருக்காங்க.





(இந்த அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கிறதுக்குப் பல லட்சம் அல்லது சில கோடிகள் ஆகும் பாருங்க!!)

விழிப்புணர்வுன்னு சொல்றாங்களே, அது யாருக்குத் தேவை? அங்கே குப்பை கொட்டுகிற அரசாங்கத்திற்கா, மாநகராட்சிக்கா? இல்லை சும்மா அந்த வழியா போகிற பொதுமக்களுக்கா?



டிச, 2013 -ல் எடுக்கப்பட்ட கூகிள் மேப் படம்

2007, 2008-களில் நான் கவனித்திருக்கிறேன். அப்போது குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்து வெகுதூரம் சதுப்புநிலத்திற்குள் குப்பைமேடு(இப்போது) வந்துவிட்டது.

http://www.raguc.com/2012/06/blog-post.html - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு பற்றி, இந்தப் பதிவில் ரகு விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும் சில செய்திகளுக்கான சுட்டிகளும் இடுகையில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஆக்கிரமிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அரசே இந்தப் பகுதி நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்றாலும் விற்கும்!!!