Tuesday, December 9, 2014

ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி

கத்திரி கேசாத்ரி சொல்றது என்னான்னா....

நரேந்திர மோடி கேபினெட்ல ரெண்டு பிராமணாள சேர்த்துண்டத பாராட்டினது நாட்ல பெரிய பிரச்சினையாயிடுது.

ஏதோ அந்த காலத்துல சொசைட்டில எங்களவாள்லாம் பெரிய இடத்துல இருந்தா. ஆனா இப்ப அப்படியா இருக்கு? எங்களவாளுக்கெல்லாம் ஏதோ  கொஞ்சோண்டுதான் பவர் இருக்கு. (என்ன பத்தாயிரம் இருபதாயிரம் புக்கு விக்குற அளவுக்கு இருக்குமா?) எண்ணிக்கைல எங்களவாள்லாம் கொஞ்சமாத்தான் இருக்கா! பொது இடத்துல பார்க்கக்கூட முடியாது. (ஆமா, அவாள்லாம் கார்ல போவா, பெரிய பெரிய மால்லதான் இருப்பா. சாதாரண மக்கள் இருக்குற இடத்துக்கு ஏன்  வரப்போறா?) இதே நிலமதான் தமிழ்நாட்லேயும்.

சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே, தமிழ்-தெலுங்கு பிராமின் சர்க்கார் உத்தியோகத்துல ஏகத்துக்கும் இருந்தா. எப்ப இந்த 'ஜஸ்டிஸ் பார்ட்டி'யும் 'திராவிடாள் குரூப்'பும் சேர்ந்துண்டு கோட்டாவ கொண்டு வந்தாளோனோ, அன்னிக்கே போச்சு. மெடிக்கல் சீட்ல நம்மவாளுக்கு இடம் இல்ல, கவர்மென்ட் உத்தியோகத்துலேர்ந்து, என்ஜினீரிங்க் காலேஜ்லேர்ந்தெல்லாம் மொத்தமா விரட்டியடிச்சுட்டா.(அப்புறம்?)

அரசியல்ல முழுசா எந்த அதிகாரமும் இல்லாம ஆக்கிட்டா. தமிழ்நாட்ல நடந்த இந்த அநியாயத்தெல்லாம் பார்த்துண்டு, எங்களவால்லாம் பம்பாய்க்கும் டெல்லிக்கும் வேலைக்குப் போனா. இதெல்லாம் 1970-ல (அச்சச்சோ, என்னா அடக்குமுறைக்கெல்லாம் ஆளாகியிருக்கா பாருங்கோ!). 1900-க்குப் பின்னாடி நிறைய இன்ஜினீரிங் காலேஜ் வந்தபின்னாடி, பிராமணாள்லாம் இன்ஜினீரிங்க படிச்சா அப்புறம் இந்த ஐ.டி. மேனேஜ்மென்ட்ல தேவை அதிகமானதுனால MBA படிச்சா. இன்னிக்கு ஐ.டி. மேனேஜ்மென்ட், ஆடிட்டிங்ல எல்லாம் நம்மாளுங்கதான் இருக்கா.

நிறைய பேரு யு.எஸ். போயிட்டா. பின்ன, அங்க சிலிக்கான் வேலி வளர்ச்சியெல்லாம் நம்மவளாவாலதானே. இந்தியாவுலயே நிறையபேரு தொழில் தொடங்கினா, ஐ.டி.புரட்சிக்கு வழிவகுத்தா.

என்னதான் நாங்கல்லாம் அரசியல்ல இருந்து விலகியிருந்தாலும், தமிழ்நாட்ல எதுக்கெடுத்தாலும் எங்களதான் திட்டுறா! மோடி பிராமினிக்கல்ங்குறா, ஜெயலலிதா கூடதான் பிராமினிக்கலா இருக்கா. ஆனா, இந்த திமுகவுக்கு மட்டும்தான், சான்ஸ்கிரிட்ட ப்ரோமோட் பண்ணாலும் பிராமினிக்கல், 'இந்தி'ய ப்ரோமோட் பண்ணினாலும் ப்ராமினிக்கல். எல்டிடிஈ-க்கு எதிரா பிஜெபியோ காங்கிரஸோ, யார் பேசினாலும் ப்ராமினிக்கல். மார்க்கெட் எகானமி, க்ளோபலைசேசன் கூட ப்ராமினிக்கல்ங்குறா.

தமிழ்ல படம் எடுக்குறாளோ இல்லியோ, இவால்லாம் எப்பவுமே எங்களவாள 'பேடா’தான் காட்டுறா. இப்பகூட 'ஜீவா'ன்னு ஒரு படம் வந்ததோணோ, அதுல கூட ஏதோ எங்களவா எல்லாம் சேர்ந்து சதி பண்ணிதான் அவாளயெல்லாம் ஸ்டேட் லெவல் டீம்ல விளையாடவிடாம பண்ணிட்டதா சொல்றா. பிராமின்ஸ்லாம் மத்தவங்கள 2000 வருஷமா அடக்கியாண்டாங்க, படிக்கவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் இப்ப பேஷனாயிடுத்து. அவா அவா இஸ்டத்துக்கு பேசறா. எதுக்கும் ஆதாரம் கிடையாது, அடுத்து எந்த ஆராய்ச்சியும் கிடையாது. (இந்த கட்டுரைக்கு எத்தன புள்ளிவிவரங்கள அம்பி கொடுத்திருக்கா? நீங்களே பாத்துக்கோங்கோ).

பிற்படுத்தப்பட்டவா பண்ற அடிதடிக்கெல்லாம்கூட நாங்கதான் காரணம்ங்குறா! இந்த சாதில்லாம் உருவாக்குனது நாங்கதான்தானாம், அதனால இதுக்கெல்லாம் நாங்கதான் பொறுப்புங்கறா. ஆனா, உண்மை அது கிடையாது.

புள்ளிவிவரங்கள்லாம் கூட இருந்தாலும் (ஆனா புளைளையாண்டன் கொடுக்கமாட்டன்!), அங்கங்க பாக்குறத காதுபட கேக்குறத வச்சி சொல்றேன், பிராமின்ஸ்தான் நிறைய இன்டர்-காஸ்ட் மேரேஜ் பண்ணியிருக்கா. நாங்கல்லாம் கௌரவக்கொலை பண்றது இல்ல பாருங்கோ.

நாங்கள்லாம்தான் இந்த மாநிலத்தோட கலையைப் பாதுகாக்குறோம், பழமையான நினைவிடங்களை சின்னங்களைப் பாதுகாக்குறோம், இந்த மாநிலத்தோட கலாச்சாரத்தையே பாதுகாக்குறோம் (என்னாதூ?). தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வ்வளவோ பண்ணியிருக்கோம். அறிவியல், இன்ஜினீரிங், மெடிக்கல் அப்புறம் கல்விக்கு இந்த மாநிலத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம்.(ஓஓஓஓ அப்படியா?)

ஆனா, அரசியல்ரீதியா ஒதுக்கப்பட்ட, சமுதாயத்தால பழிக்கப்பட்ட இந்த தமிழ் பிராமணர்கள் அவங்களோட அடையாளத்த எப்படிப் பாதுகாக்கப்போறோம்னு தெரியல? அதேநேரத்துல பாதுகாப்பா எப்ப உணரப்போறோம்னும் தெரியல?

படிப்புலயோ, வேலைலயோ, அரசியல்லயோ பிராமணாளுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்க வாய்ப்பில்லே. எங்களவாளுக்கு வேண்டியதெல்லாம், மத்தவாளப் போல இந்த நாட்டுக்கு சேவைசெய்யுறதுக்கான வசதியான சூழல்தான். ஒரு லிபரல் நாட்ல, எப்படி மத்தவாள்லாம், அதான் இந்த முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ், பார்சி, ஜெயின்லாம், தங்களுக்குன்னு நம்பிக்கை, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை, மொழின்னு இருக்காளோ, அதேமாதிரி தமிழ் பிராமின்ஸும் தங்களோட அடையாளத்தோட இருக்கணும்னு நினைக்குறா.
எங்களவாள பிராமினா இருக்க விடுங்கோ,
தமிழனா இருக்க விடுங்கோ,
இந்தியனாவும் இருக்க விடுங்கோ!

எங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்ல மாறணும்! (பஞ்ச் டயலாக்கா?)

Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:




      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.


Sunday, January 12, 2014

விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)

தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.




பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!