Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:




      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.


Sunday, January 12, 2014

விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)

தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.




பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!