Wednesday, February 25, 2009

பிரான்சிஸ் கிருபா என்கிற பைத்தியக்காரன்!

விகடனில் 'மல்லிகை கிழமைகள்' என்ற தலைப்பில் பலரையும் கிறங்கடித்த கவிதைகளை எழுதியவன் இந்த பிரான்சிஸ் கிருபா. விகடனில் அந்த கவிதைகளை படிக்கும் போது அது ஒரு 'பெண்' என நான் எண்ணியதுண்டு.

கற்பனையை பாடலாக்கலாம்...
இப்படி இருந்தால் நன்றாக இருக்குமே என்கிற ஏக்கத்தை கவிதையாக்கலாம்...
ஒன்றுடன் ஒன்று ஒப்புமைப்படுத்தி எழுதலாம்...
இயற்கையை கவியில் வடிக்கலாம்...

ஆனால் கற்பனைக்கு எட்டாத, புரிந்து கொள்வதற்கு சிக்கலான, மந்திர வார்த்தைகளை கவிதையாக்குகிறான் இந்த பைத்தியக்காரன். நான் வாசித்த ஒரு சில கவிஞர்களில் மிகவும் வித்தியாசமானவன் இவன்.

இவன் 'அலைகளிடமிருந்து பலூனை பிடுங்குகிறான்', 'கதறியழுகின்ற கனவுகளை தொடுக்கிறான்', 'மழை நூலக ஊழியராகிறான்'.

மஞ்சள்நிற இசைத்தட்டில் நிலா
மவுனமாகச் சுழல
பூக்களுக்கு விசிறும் வண்ணச் சிறகுகள்
நடனக் குறிப்புகளால் நிரம்புகிறது.
வெயிலேறி மினுமினுக்கும் காட்டு நதிகள்
குருதிக்குள் பாயந்து கலக்கிறது.
வெண்சிகப்பு கூழாங்கற்கள் பாதையடைக்கின்றன.
அலை நெளிக்கும் நடனச் சுவடுகளில்
காலம் தன் பாதங்களைப் பணிவாக வைக்கிறது.
நடனமிடும்போதெல்லாம் நான்
யாரையோ அணிந்துகொள்ளத் தவிக்கிறேன்
முடிவுவரை என்னைக் களைவதே நடனமாயிருக்கிறது.
நடனமிடும்போது
கெட்ட கனவுகளின் விஷம் முறிகிறது.
முத்தமிடும்போது கடல்
மீனின் நடனமாகிறது.


- 'வலியோடு முறியும் மின்னல்' என்கிற கவிதைத் தொகுப்பில் ஜெ.பிரான்சிஸ் கிருபா எழுதியது.

தொண்டன் - தொண்டராக
தலைவன் - தலைவராக
கலைஞன் - கலைஞராக (கருணாநிதி ஞாபகத்திற்கு வந்தால், அதற்கு இந்த ஊர்சுற்றி பொறுப்பில்லை)
கவிஞன் - கவிஞராக பதவி உயர்வு காத்திருக்கிறது இந்தக் கவிஞனுக்கு.

அதுவரை, அவரது கவிதைகளைப் படித்து பித்து பிடித்து அலையலாம் வாருங்கள்.

1 comment:

Suresh said...

Ungalai pondravargalin asirvathathudan nanum pathivu poda arambithu ullan.

Kandipa ungaluku pidikum endru nambugiran.
http://sureshstories.blogspot.com/2009/03/blog-post_02.html

கருணாநதி அரசு மருத்துவமனையில் ?
அன்புள்ள முதல் அமைச்சர் அவர்களே,
உங்களுக்கு உடம்புக்கு முடியவில்லை என்று நீங்கள் அரசு மருத்துவமனைக்கு சென்று இருந்தால் என்ன லாபம் என்று கிழே பதிவு செய்து இருகிறேன்.