Tuesday, February 3, 2009

இலங்கை:ஈழம் - தமிழனின் கனவு நாசமாகட்டும் !

இடம் - இலங்கை மற்றும் தமி்ழீழப் பகுதியாக அறிவிக்கப் பட்ட பகுதிகள் மற்றும் உலகம்.
காலம் - தெரியவில்லை
காட்சி(கள்) - விளங்கவில்லை...

* இலங்கை இராணுவப் படைகள் ஒவ்வொரு தமிழன் வீட்டிலும் புகுந்து 'எதையோ/யாரையோ தேடுகிறேன் பேர்வழி' என்று 'அறவழியில்' தேடுதல் வேட்டை நடத்துகின்றன.

* தமிழர்களின் பாஸ்போட்டுகள் பறிக்கப்படுகின்றன அல்லது மறுக்கப் படுகின்றன.

* செய்திகள் வெளிவருவது திட்டமிட்டு முடக்கப்படுகிறது.

* இலங்கை அரசு 'இன்டர்போலுடன்' இணைந்து 'பயங்கர(வாதிகள்!)' தேடுதல் வேட்டை நடத்துகிறது.

* இலங்கையில் அமைதி(?!) திரும்பிவிட்டதாக 'இந்தியாவும் + இலங்கையும்' கூட்டு அறிக்கை வெளியிடுகின்றன.

* இதை (கூறுகெட்ட) உலக சமுதாயமும் 'உறுதி செய்ததாக' அறிவிக்கிறது.

* நயன்தாராவின் 'சம்பளமும்' - எந்திரனின் 'லேட்டஸ்ட் - அதிரடி புகைப்படங்களும்' தலைப்புச் செய்திகளாக மறுபடியும் மாறுகின்றன.

* 'சீமான்' மீண்டும் கைது செய்யப் படுகிறார்/அல்லது 'தேனி சுகுமாரோ - திண்டுக்கல் சாரதியோ' தீக்குளிக்கிறார்கள்.

* தமிழுலகம் மீண்டும் என்ன செய்யப்போகிறது? என்ற என் பலத்த எதிர்பார்ப்பினூடே....

அந்த கனவு கலைகிறது....


இந்த 'நாடும்' அதன் 'பகுத்தறிவில்லாத' மக்களும் நாசமாய்ப் போகட்டும்... இந்தத் தமிழனின் கனவும் நாசமாய்ப் போகட்டும்.

4 comments:

Anonymous said...

naasamaaiththaan pokiraan thamilan

ஊர்சுற்றி said...

வாங்க அனானி.

ஆஆங்க...

யூர்கன் க்ருகியர் said...

We ,,the tamils...we must do something to save people.

ஊர்சுற்றி said...

உங்க கருத்துக்கு நன்றி ஜுர்கேன்.