Monday, December 22, 2008

கடலை கடவுள், குரு, ஆசான் அதிஷாவுக்கு...

வலையுலகின் 'இளைய தளபதி' - கில்லி - குருவி 'அதிஷா' அவர்கள் எழுதிய இந்த இடுகையை உங்களில் பெரும்பாலோர் படித்தி்ருக்கலாம்.

அதன் உட்பகுதிகளாகிய
1)கடலைபோடுவதின் வகைகள்
2)கடலையின் கொள்கை
3)பல அனுபவக்கதைகள்
4)ஆராய்ச்சி முடிவுகள் குறித்து,

படித்து தெளிந்து அதன் பயனை அடைந்து வருவதால் இவ்விடுகையை எழுத வேண்டியது - குருவிற்கு சீடன் செலுத்தும் நன்றிக்கடன் ஆகிறது. (கடலை கடவுளே வாழ்க !)

எத்தனையோ பேர் கடலையை பற்றி எழுதியிருந்தாலும், இந்த இடுகையைப் படித்த பின்தான் இதன் வழிமுறைகளை தீவிரமாக பின்பற்ற ஆரம்பித்தேன். அப்போதுதான் இந்த ஆராய்ச்சியின் பயனை அனுபவித்தேன். (கடலை மன்னனே வாழ்க !)

கடலை போட மிக முக்கியமான, எதிர்பாலினத்தேர்வு (அதாவது நல்ல டுபுரி)வாய்த்து அதில் கடினமான உழைப்புடனும் நேர்மையுடனும் இன்று நான் இருக்கிறேன் என்றால் அதற்கு முழுக்க முழுக்க அண்ணன்தான் காரணம் (கடலை கண்திறந்தாய் வாழ்க !).

கடலையை எப்படி 'கன்டினியு' பண்ணுகிறேன் என்பதையெல்லாம் சொல்ல ஆசைதான். ஆனால் அண்ணனின் வழிமுறை 7 தடுக்கிறது.
//7.நீங்கள் இதற்கு முன் செய்த லூசுத்தனமான சேட்டைகள் குறித்தும் அதன் பின்விளைவுகள் குறித்தும் எக்காரணம் கொண்டும் பேசக்கூடாது // :) (கடலைக்கு உயிர்கொடுத்தாய் வாழ்க !)

ஒரு சுய விளம்பரம் : இந்த இடுகையே ஒரு சுய விளம்பரம்தான். இதுல இன்னொரு விளம்பரமா...மன்னிச்சு விட்டுருங்க மக்களே.


ஒரு பிற்சேர்க்கை : 'அண்ணன்' அதிஷா சமீப காலமாக ஜே.கே.ரித்திஷ்( JKR) அவர்களுக்கு 'முன்னணி ஹீரோயின்களுடன் கடலை போடுவது எப்படி' என்பது குறித்து எந்த பக்க சார்பும் இல்லாமல் வகுப்பு எடுத்து வருகிறாராம்!!!
தமிழ் ஹீரோயின்கள் ஜாக்கிரதை.

பி.கு. அடைப்பிற்குள் உள்ளவை அண்ணன் அதிஷாவின் இடுகையிலிருந்த பின்னூட்டங்கள்.

No comments: