Monday, November 28, 2011

கலாம் வர்றார் - ''சொம்ப எடுத்து உள்ள வை''!

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அரசாங்க விஞ்ஞானி அப்துல் கலாம், கூடங்குளம் போராட்டத்தில் தன்னால் ஆற்ற முடிந்த பங்கை ஆற்றிவிட்டுச் சென்றுவிட்டார்; இன்னும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

அணுஉலையை எதிர்த்தவர்களில் கூட சிலபேர், இப்போது மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். இருக்கட்டும்! 600 கி.மீ. தொலைவில் இருக்கும் இவர்களில் பெரும்பாலானோருக்கு கூடங்குளம் மக்களின் பீதியும், போராட்டத்தின் நியாயமும் புரிவது சிரமம்தான்.

(இணையத்தில் கிடைத்த்து, யார் வரைந்தது என்று தெரியவில்லை. ஊர் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது)

என்னதான் இருந்தாலும், ''எவன் எப்படி போனா எனக்கென்ன, எனக்கு கரண்ட் வரணும், அவ்ளோதான்'' என்ற மனநிலையில் இருக்கும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது! சரி, இப்போது நம்ம ஹீரோ திரு. அப்துல் கலாம் அவர்களின் அறிக்கைக்கு வருவோம். பாதுகாப்பானது என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் மட்டும் கொடுக்கும் அறிக்கையாக அது இருந்திருந்தால், நாம் இவ்வளவு தூரம் திருவாளர் அப்துல் கலாம் மீது கோபம் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கூடங்குளம் அணுஉலையைச் செயல்பட வைக்க, மக்களுக்குப் பணம் கொடுத்து காரியத்தைச் சாதித்துவிடலாம், மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று இலவசம் கொடுக்கும் அரசியல்வாதிகளைப் போல், ஒரு சூப்பர் 10 அம்ச திட்டத்தை அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்கள் இதுவெல்லாம் கேட்காதபோது, அணுஉ(கொ)லைத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதுபோன்று அறிவிப்பதெல்லாம் லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் வராதா? என்று நவயுக இந்தியன் தாத்தா 'அன்னா ஹசாரே' ஆராய்ந்து சொன்னால் நன்றாயிருக்கும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 10-அம்ச திட்டங்களையும் தாண்டி, அப்துல் கலாமின் அறிக்கையில் இருக்கும் மற்ற சில விசயங்கள் மற்றும் விட்டுப்போன விசயங்கள் பற்றி காண்போம். முழு அறிக்கையும் இங்கே படிக்கக் கிடைக்கிறது. ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள்.

''ஏற்கனவே ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு,  இதில் 2022 க்குள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில் வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும் என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008 வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான் ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது. எனவே இனிமேல் இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாகும் எனவே மரபு சார எரிசக்தி முறையில் அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதற்கு அந்த நாட்டிலேயே அதன் தொழில் நுட்பம் கிடைப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும், அதன் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி நடக்கும் என்ற தொலைநோக்கின் காரணத்தினாலும் மற்ற வகையில் மின் உற்பத்தி செய்யவோம் என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. ''


இப்படி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெர்மனியிலிருந்து வரும் செய்திகள் அப்துல் கலாமின் இந்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அணுஉலைகளை மூடுவதான ஜெர்மனியின் முடிவு குறித்து, அந்நாட்டின் சான்சலர் 'ஆஞ்சலோ மெர்கெல்(Angelo Merkel)' தெரிவித்த வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

''Step by step, we will abandon the nuclear energy by the end of 2022, is path of a big challenge for Germany. We believe that our country can become a front runner for the creation of renewable energy and as a first large industrial nation we can create such a change towards highly efficient and renewable energies with all  opportunities for export, development and technology which creates jobs. We believe that with these decisions, we have the opportunity to create the turn around toward the electricity of future. The German government and the coalition is ready to go down this path together".
மேற்கொண்டு விவரங்கள் வேண்டுவோர் சான்சலர் ஆஞ்சலோ மெர்கெல்-லின் அறிக்கையை இந்த விடீயோவில் http://www.youtube.com/watch?v=v2kchdJ_Z68 பார்க்கலாம். மரபுசாரா சக்தி உருவாக்கத்தில் முன்னோடியாக ஜெர்மனி இருக்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அணுஉலைகளை மூடுவது என்ற முடிவானது, எதிர்கால மின்சாரத்திற்கான மாற்றுகளை உருவாக்க ஒரு வாய்ப்பாக அமையும் எனிகிறார் ஆஞ்சலோ மெர்கெல்

ஆனால், நம் எல்லோருக்கும் பிடித்தமான 'அப்துல் கலாம்' ஏன் வேறுமாதிரி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்? இப்படியான தவறான கருத்துகளை அறிக்கையாக அவிழ்த்துவிடுவது ஒரு மகா மேதையான விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவருக்கு அழகா?  சரி, ஒரு வாதத்துக்கு அவரது கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும். யுரேனியம் இறக்குமதி செய்வது ஜெர்மனிக்கு மிகுந்த செலவு கொடுக்குமாம்!  அப்படியானால், இந்தியாவில் மட்டும் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறதா? நாமும் இறக்குமதிதானே செய்யவேண்டியுள்ளது? இவர் பேசுவதைப் பார்த்தால் யுரேனியத்திற்கே அதிக செலவு வைக்கவேண்டியிருக்கும் போலிருக்கிறதே! இந்தியாவிற்கு ஏற்கெனவே இருக்கும் கடன் சுமை போதாதா?  ஆனால், யுரேனியம்தான்  மலிவான எரிபொருள் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்களே நம்மூர் விஞ்ஞானிகள்!

'ஜெர்மனி யுரேனியம் பற்றாக்குறையினால்தான் அணுஉலைகளை இழுத்து மூடப்போகிறது' என்பது முழுப்பொய் என்பதை உணர்ந்துகொள்ள சமீபகால செய்திகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

http://www.bbc.co.uk/news/science-environment-15864806
//GlobeScan had previously polled eight countries with nuclear programmes, in 2005. In most of them, opposition to building new reactors has risen markedly since.In Germany it is up from 73% in 2005 to 90% now - which is reflected in the government's recent decision to close its nuclear programme//.


க்ளோப்ஸ்கேன் 2005-ம் ஆண்டு அணுசக்தி திட்டங்களை வைத்திருக்கிற எட்டு நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தது. 2011-ம் ஆண்டிற்கான தற்போதைய கணிப்பில், இந்நாடுகளில் பெரும்பாலானவற்றில், புதிய அணுஉலைகளைக் கட்டுவதற்கான எதிர்ப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் அணுஉலைகளுக்கான எதிர்ப்பு 2005-ம் ஆண்டில் 73%-ல் இருந்து இப்போது 90% ஆக அதிகரித்துள்ளது. இது, '2022 இறுதிக்குள் நாட்டின் அனைத்து அணுஉலைகளையும் மூடுவது' என்ற அந்நாட்டு அரசின் சமீபத்திய முடிவில் பிரதிபலித்துள்ளது.
ஆனால் 'அப்துல் கலாம்' ஜெர்மனிக்கு யுரேனியம் கிடைக்கவில்லை, அதனால் அணுஉலைகளை மூடுகிறது என்கிறார். மேலும் அவர் சொல்கிறார்,
மரபு சார் எரிசக்தி முறை ஜெர்மனியில் குறைவான செலவு பிடிக்கிறதாம்! அப்படியெனில் ஏன் இந்தியாவில் அந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது?  ஜெர்மனி தேர்ந்தெடுக்கிற மரபுசார் எரிசக்தி முறையை நாமும் கடைபிடித்தால் இன்னும் அதிகமான பணத்தை மிச்சப்படுத்தலாமே? கூடவே இன்னொரு நாட்டை நம்பி இருக்கவேண்டிய தயவும் இருக்காது. புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த மாதிரியும் ஆயிற்று. இளைஞர்களிடம் ''புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் கலாம் அவர்கள், அணுஉலை தொழில்நுட்பத்தை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பது ஏன்?

இன்னும் ஒரு செய்தி: 24 நவ-2011.
http://www.bbc.co.uk/news/world-europe-15883782
அணுக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ரயிலை மறித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல். எதற்காக போராட்டம்? அணுக்கழிவுகளைச் சேமித்துவைக்கும் கிடங்கு பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள் ஜெர்மன் நாட்டு மக்கள். போலீசாருடன் மோதும் அளவிற்கு அணுஉலை மற்றும் அணுக்கழிவுகளுக்கு எதிரான வலுவான போராட்டம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 

'ஜெர்மனியின் அணுஉலைகளை மூடுவது என்ற அந்நாட்டு அரசின் முடிவின்'  பின்னணியில் 'அந்நாட்டில் யுரேனியம் தீர்ந்துவிட்டது' மட்டும்தான் காரணம் என்பது போன்ற தவறான வாதத்தை, தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரு. அப்துல் கலாம் அவர்களின் ஒட்டுமொத்த அறிக்கையையும் எந்த அடிப்படையில் நம்புவது?!

பேசப்படாமல் விடப்பட்டது:
மின்கடத்தல் மற்றும் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு. மத்திய அமைச்சரே கூறுகிறபடி இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 34 சதவீதத்துக்கும் அதிகமாக வீண்டிக்கப்படுகிறது http://www.livemint.com/2010/08/23214133/Losses-in-transmission-distri.html.  அதாவது போகிறவழியில் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 7 சதவீதமும், தென் கொரியாவில் 4%  ஆகவும் இருக்கிறது. இதைக் குறைத்தாலே, மின்சாரத்தில், குறைந்தபட்சம் இன்னும் 5 ஆண்டுகளுக்காவது நாம் தன்னிறைவோடு இருப்போம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கூடங்குளத்தில் அப்துல் கலாம் பேசியபோது (http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=20878) இந்த மின் இழப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்போது வெளியிட்டிருக்கிற அறிக்கையில் இதைப் பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. "மத்திய அரசின் நிர்பந்தந்தத்தின் பேரில் தான் இந்த அறிக்கையை வெளியிடவில்லை" என்று கூறும் அப்துல் கலாம், ஒரு விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அரசுத் தரப்பில் நடைபெறும் இதுபோன்ற பொறுப்பில்லாத தனத்தைச் சுட்டிக்காட்ட வேண்டுமா கூடாதா? இதுவெல்லாம் இந்தியா வளர்ச்சியடைவதைப் பாதிக்காதா என்ன? வளர்ச்சி பற்றி கவலைப்படும் இந்த விஞ்ஞானி, ஆண்டுக்கு 35,000 கோடி இழப்பு ஏற்படும் இந்த விசயத்தில் கவலைப்படாதது ஏன்?

அப்படியானால் அப்துல் கலாம் போன்றவர்கள் கவலைப்படும் வளர்ச்சி என்பது வெறும் GDP எண்களோடு நின்றுவிடுகிறதா?

ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின்(http://news.sky.com/home/world-news/article/16112805) நிலை என்ன? இந்தியாவின் வளர்ச்சியில் இல்லை, குறைந்தபட்சம் உயிர் வாழும் அடிப்படை உரிமையிலாவது அவர்களுக்கு பங்கு இருக்கிறதா? வளர்ச்சி வளர்ச்சி என்று திரும்பத் திரும்ப உபதேசித்து வரும் அப்துல் கலாம் அவர்கள் இவர்களுக்கு என்ன சொல்கிறார்? ஒருவேளை இவர்களெல்லாம் இந்தியர்கள் இல்லையோ?!

4 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம் நண்பரே! பதிவுலகில் புதியவன். நல்ல பதிவு. விரும்பிப் படித்தேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.

SURYAJEEVA said...

தேசிய இறையாண்மை என்ற ஆயுதத்தை மத்திய அரசு கையில் ஏந்துவதால் பலர் மதில் மேல் பூனையாக ஆகலாம்... ஆனால் கொள்கை பிடிப்புள்ள ஒருவன் மக்களுக்காக தேசத் துரோகி என்ற பட்டம் சுமக்கவும் தயாராக இருப்பான் என்பது தான் திண்ணம்

Anonymous said...

வணக்கம் ஊர்சுற்றி,
உங்களின் இந்த ஆராச்சிக் கட்டுரைக்காக உங்களை அடுத்த வருட நோபல் பரிசிற்கு உங்களை பரிந்துடை செய்வதில் பெருமை அடைகிறோம்.

இப்படிக்கு

வெட்டி
"கைபுள்ள சங்கம்"
கீழ்ப்பாக்கம்

Anonymous said...

வணக்கம் ஊர்சுற்றி,
உங்களின் இந்த ஆராச்சிக் கட்டுரைக்காக உங்களை அடுத்த வருட நோபல் பரிசிற்கு உங்களை பரிந்துடை செய்வதில் பெருமை அடைகிறோம்.

இப்படிக்கு

வெட்டி
"கைபுள்ள சங்கம்"
கீழ்ப்பாக்கம்