Tuesday, November 24, 2009

பிடிச்சவங்க பிடிக்காதவங்க - யாரையும் விடுவதாய் இல்லை

இந்த இடுகை எழுதுவதற்கு நிறைய யோசிக்க வேண்டியிருந்தது! (மத்த இடுகையெல்லாம் மணிக்கணக்கா உட்கார்ந்து யோசிச்சி எழுதுறியாடா? என்று நீங்கள் யோசிப்பது எனக்குப் புரியும்).

பொதுவாகவே, எனக்கு ஒரு பழக்கம். பிடிச்சவங்களை சட்டுன்னு அடையாளம் காட்டுறது. ஆனா பிடிக்காதவங்கன்னு வந்தா 'பகிர்ந்துகொள்வதில்லை'.

ஆனால் மாதவராஜ் அவர்களின் இந்த வரிகளைப் (பிடிக்காதவர்களைச் சொல்வதற்கு இங்கு ஒரு தைரியம் வேண்டியிருக்கிறது. முக்கியமாக அதற்குத்தான் இந்தத் தொடர். எதாவது ஒரு இடத்தில் அவர்களைப் பிடிக்காமல் போகிறது. ஜெயமோகன் எப்போது அருந்திராயை ’குருவிமண்டை’ என்று சொன்னாரோ அப்போதிலிருந்து அவர் பிடிக்காமல் போய்விட்டார் எனக்கு. அதற்காக அவரது ரப்பரும், காடும் எனக்குப் பிடிக்காமல் போகாது. பதில்களை/ பதில் சொல்கிறவர்களை இப்ப்டி புரிந்துகொள்ள வேண்டும் என நினைக்கிறேன்.) படித்துவிட்ட பிறகு இதை எழுதுவதில் இருந்த குழப்பம் போய்விட்டது.


பிடித்தவர் - பிடிக்காதவர்

(காமராஜர்) ஸ்டாலின் - ஜெயலலிதா
பிரான்சிஸ் கிருபா - ஜோ.மல்லூரி
ராமகிருஷ்ணன் - இரமணிச்சந்திரன்
இளையராஜா - விஜய் ஆன்டனி(தற்போது)
பாலா - பேரரசு
கமல் - சிம்பு
வேகா - ஸ்ரேயா


என்னை அழைத்தவர்கள்:

தொடரை இழுத்துச் செல்ல நான் அழைப்பது:
3) Cheers with Jana ஜனா (ஏற்கெனவே எழுதிவிட்டார் - சுட்டி இங்கே)
விதிமுறைகள் இங்கே.
வாங்க மக்கள்ஸ், வந்து நீங்களும் பிடிச்சது பிடிக்காதது சொல்லுங்க.

படிச்சது பிடிக்காதது பற்றி....
ஜோ.மல்லூரியின் ஏகப்பட்ட பில்ட்அப்புகள் - என்ன கொடுமை சரவணா எனச் சொல்ல வைத்தன - நான் அவரது படைப்புக்களை(!) படிக்கவில்லை என்றாலும். அவரைப் பற்றிய எனது ஒரு இடுகை இங்கே. நடிகைகள்லாம் தமிழ்நாட்டுலதான் இருப்பாங்களான்னு தெரியல. இருக்கலாம்ங்கற நம்பிக்கைல இவங்க பேர போட்டிருக்கேன்.

2 comments:

வால்பையன் said...

நறுக், சுருக்!

அமுதா said...

வெட்டு ஒண்ணு துண்டு ரெண்டா சொல்லிட்டீங்க. அழைப்பை ஏற்றுக் கொண்டதற்கு நன்றி