Wednesday, December 4, 2013

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்டி ஆக்கிரமிப்பு!!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே செய்தித் தாள்களிலும், வலைப்பூக்களிலும் பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஆதங்கத்தில் எழுதப்பட்ட இடுகைகள் சில...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (நவ, 2009)
http://haripandi.blogspot.in/2009/11/blog-post_09.html

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! (மார்ச், 2010)
http://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு (2012) - விளக்கப் படங்களுடன் சிறப்பான பதிவு
http://www.raguc.com/2012/06/blog-post.html

செய்திகள் சில:
நவ, 2013-ல் வெளியான ஒரு செய்தி
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=843291

//முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.//

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி (யாரிடமிருந்து மீட்க?)
http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1539543.ece

//சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.
2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.//

5 கோடி ரூபாய்க்கு என்ன பண்ணினாங்கன்னு கேட்காதீங்க! என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னும் கேட்காதீங்க! இனிமே என்ன பண்ணுவாங்கன்னும் கேட்காதீங்க.

பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு-க்கு செலவு பணிணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க(உறைவிட மேம்பாடு, ஆராய்ச்சி - அப்படி எதுவும் நடக்குதா என்ன?). பழைய அறிவிப்புப் பலகைகளுக்குக் கொஞ்சதூரம் தள்ளி , சில புது அறிவிப்புப் பலகைகளை வைச்சிருக்காங்க.





(இந்த அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கிறதுக்குப் பல லட்சம் அல்லது சில கோடிகள் ஆகும் பாருங்க!!)

விழிப்புணர்வுன்னு சொல்றாங்களே, அது யாருக்குத் தேவை? அங்கே குப்பை கொட்டுகிற அரசாங்கத்திற்கா, மாநகராட்சிக்கா? இல்லை சும்மா அந்த வழியா போகிற பொதுமக்களுக்கா?



டிச, 2013 -ல் எடுக்கப்பட்ட கூகிள் மேப் படம்

2007, 2008-களில் நான் கவனித்திருக்கிறேன். அப்போது குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்து வெகுதூரம் சதுப்புநிலத்திற்குள் குப்பைமேடு(இப்போது) வந்துவிட்டது.

http://www.raguc.com/2012/06/blog-post.html - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு பற்றி, இந்தப் பதிவில் ரகு விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும் சில செய்திகளுக்கான சுட்டிகளும் இடுகையில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஆக்கிரமிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அரசே இந்தப் பகுதி நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்றாலும் விற்கும்!!!

Monday, November 4, 2013

இப்படியாக, 'சரணாகதி'யடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமலஹாசன்

ஆமாம். 'ஜெயா டிவி'-யில் 02 நவ 2013 அன்று கமல் தோன்றி 'நடித்த' சிறப்புப் பட்டிமன்றத்தை (முன்)பின்வைத்து எழுதப்படுவதுதான் இந்த இடுகை.


இப்படியாக சரணாகதியடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் 'கமலஹாசன்'.

''தலைவா படம் திரையிடப்பட்டால் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மர்மக் கடிதம் மூலம் அச்சுறுத்தல்'' என்று கூறி, அந்தப் படத்தையே திரையிடாமல் செய்ததன் பின்னாலுள்ள அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த 'ஜெயா டிவி' நிகழ்ச்சியைப் பார்த்த அல்லது கேள்விப்பட்ட உடனேயே இது மனதில் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனாலும், இன்னமும் கமலைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் எழுத்துகளை இணையத்தில் காணும்போது......சில அடிப்படை விசயங்களை அவர்கள் கணக்கில் கொள்வதே இல்லை எனத் தோன்றுகிறது.

1. கமல் தற்போதைய போட்டி நிறைந்த சினிமா உலகில் ஒரு சிறந்த வியாபாரி
2. பெரிய அளவில் வியாபாரம் செய்வதற்காக அன்றி, புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா வளர்ச்சிக்காகவோ கலை தாகத்திற்காகவோ அவர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
3. தனது வியாபாரத்திற்கு தடையாக யாராவது வருவார்கள் என்று தெரிந்தால் அவர்களுடன் எந்நேரமும் சமரசம் செய்யத் தயாராக இருப்பவர்.

விஸ்வரூபம் - 1 ல் ஏற்பட்ட பிரச்சினை அடுத்து வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இப்போதே 'துண்டு போட்டு' வைக்கிறார் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, அம்மா, டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம். அதற்கான முன்னோட்டம்தான் தீபாவளியன்று அரங்கேறிய பட்டிமன்றம். 

இந்த விசயத்தில் கமல் தன் சுயமரியாதையை அடகு வைத்திருக்கிறாரா இல்லையா? 'இல்லை' என்கிறார்கள் இப்போதும் கமல் ரசிகர்களாக இருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் 'அம்மா காலில் விழுவது' மட்டும்தான் அடகுவைக்கிற வகையில் வருமோ என்னவோ! 'தலைவா' பட விவகாரத்தில், விசயம் வீதிக்கு வந்த பிறகு 'கொடநாடு' தேடி ஓடியவர் நடிகர் விஜய். 'விஸ்வரூபம்-2' விசயத்தில் படம் வெளிவரும் முன்பே 'போயஸ் கார்டன்' தேடி ஓடியிருக்கிறார் நடிகர் கமல். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

கமலை, 'கலைஞன்', 'உலக நாயகன்' என்றெல்லாம் அழைப்பதுபோல், 'வியாபாரி' என்றும் அழைப்பது பற்றி யோசித்தால் நல்லது!

***********

கமலின் 'ஜெயா டிவி' பட்டிமன்றம் குறித்து பலரால் எழுதப்பட்ட ட்வீட்டுகளிலிருந்து சில:

https://twitter.com/thoatta/status/396510227622678528
//மதசார்பற்ற மாநிலம் போவேன், நாடு போவேன்னு சொன்ன கமல் சார் கடைசில என்னவோ ஜெயா டிவி ஸ்டூடியோ தான் போயிருக்காரு//

https://twitter.com/senthilcp/status/396524923549523968
//சார், உங்க தமிழ் ஆசான் யார்? கமல் -= தி முக ஆட்சி நடந்தா கலைஞர் , அதிமுக ஆட்சி நடந்தா கண்ணதாசன்//

https://twitter.com/thirumarant/status/396508289674272768
//என்னை பற்றி பேச நானே எப்படி நடுவராவதுன்னு யோசிச்சேன்,(அப்பறம் அம்மா நினைவுக்கு வந்தாங்க ஒத்துக்கிட்டேன்) - கமல்//

https://twitter.com/senthilcp/status/396307140383502337
//நிருபர் - டி வி ல நடுவரா நீங்க? ஏன்? !! கமல் - நம்ம படம் பிரச்சனை இல்லாம ரிலீஸ் ஆகனும்னா எதுவும் தப்பில்லை # ஜெயா டி வி//

Friday, July 26, 2013

ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது ஓரளவிற்கு பிரபலமடைந்து வந்தாலும், இன்னமும், ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்தும் நண்பர்கள் சிலர் இதில் தடுமாற்றத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. பலருக்கு எப்படி 'ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் (இணைய இணைப்பு இல்லாமலேயே) தட்டச்சுவது?' என்பது தெரியாமலே இருக்கின்றது!

இதை விளக்குவதற்காகத்தான் இந்த இடுகை. முடிந்தவரையில் எளிமையாக, படிப்படியாக விளக்க முயன்றிருக்கிறேன். இந்த வழிமுறைகளை உங்கள் கைப்பேசிகளில் பயன்படுத்த ஆண்ட்ராய்டு 4.X.X பதிப்பு இருக்க வேண்டும். இதற்கும் முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பு எனில்,  தமிழ் மொழியை காட்டுவதற்கான வசதியை அந்த கைப்பேசி தயாரிப்பாளரே ஆண்ட்ராய்டில் நிறுவியிருக்க வேண்டும் அல்லது ரூட்(Root) என்கிற முறையில் சில சித்து வேலைகளை நாமே செய்ய வேண்டும் (இதுபற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை, எனவே ஆண்ட்ராய்டு 4.X.X க்கு முந்தைய பதிப்புகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்பது  இந்த இடுகையில் விளக்கப்படவில்லை).


ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

1) ''கூகிள் ப்ளே'' சென்று "Tamilvisai" தரவிறக்கம் செய்து நிறுவவும்.

2) ''செட்டிங்க்ஸ்''-> ல் ''லேங்குவேச் அண்ட் இன்புட்'' செல்லவும் (Settings->Language and input)

3) ''தமிழ்விசை''(TamilVisai)-ஐ தேர்வு செய்யவும்

 4) தட்டச்சு(Type) செய்ய வேண்டிய இடத்திற்கு/பக்கத்திற்குச் செல்லவும் - புதிய குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல்(E-Mail) தட்டச்சும் பக்கம் அல்லது இணைய உலவி(Browser)யின் பக்கம்.

5) ''நோட்டிஃபிகேசன்''(Notification Bar) பாரை கீழிறக்கி, ''சூசு இன்புட் மெத்தட்(Choose Input Method)'' ஐ கிளிக் செய்யவும்.

 6) ''தமிழ்விசை'' (TamilVisai) ஐ தேர்வு செய்யவும்

7) கீபோர்டில் தெரியும் ''த'' என்கிற நீல நிற விசையை அழுத்தவும்

8) தேவையான ''தட்டச்சு முறை''யைத் தேர்வு செய்யவும்
 குறிப்பு: 'ங்' விற்கு பதில் 'ஞ' என தவறாக மூன்றாவது வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 9) இப்போது தமிழில் விசைகளை அழுத்தி தட்டச்சவும். உங்களுக்குப் பிடித்த தட்டச்சு முறையில் தமிழில் எழுதலாம். கீழே இருக்கும் படத்தில் நீங்கள் பார்ப்பது ''தமிழ் 99'' முறையிலான விசைகள்.

இப்போது எங்கும் தமிழ்..


 


ஆண்ட்ராய்டில் தமிழில் தட்டச்சுவது பற்றி கூகிளிடம் கேட்டால், 
இந்தப் பதில் கிடைத்தது. இதையும் படிக்கவும்.
http://www.bloggernanban.com/2013/01/read-write-in-tamil-on-android.html