Sunday, November 16, 2008

பேச்சலர் ஞாயிறு

எங்க வீட்டு சொந்தக்காரர், “என்னப்பா இது, வீடு மாதிரியா வச்சிருக்கீங்க? தரையோட நிறமே மாறிடுச்சி. அப்பப்போ கழுவி விடுங்கப்பா. ஒரு பாட்டில் ஆசிட் வாங்கி, ஆசிட்ட அப்டியே ஊத்திராதீங்கப்பா! தரை கலரே மாறிடும். ரெண்டு வாளி (பக்கெட்) தண்ணிய கலந்து...” –னெல்லாம் டிப்ஸ் சொல்லிட்டு இன்னொண்ணும் சொன்னாரு.

“அடுத்த வாரம் வீட்டுக்கு வெள்ளையடிக்க ஆள் அனுப்பலாம்னு இருக்கேன். பொருட்களையெல்லாம் அப்புறப்படுத்தி வைங்க”.

என்னடா இது, போன வாரமும் இதையேதான சொன்னாரு…? இப்பவும் இதையே சொல்றாரே...



இது கனவா… அப்ப அது இன்னிக்குதானா….

காலையிலேயே (8 மணிக்கு) எழுந்திருச்சி, காலைக்கடன்கள் எல்லாம் முடிச்சிட்டு, குறிஞ்சிப்பூ மாதிரியான சாப்பாட்டை சாப்பிட்டோம் (பேச்சலர்களுக்கு ஞாயிறு காலை சாப்பாடு எல்லாம் அபூர்வமா பூக்கிற குறிஞ்சி மாதிரிதான். அதுவும் வெளியூரில் தங்கி வேலை செய்றவங்களுக்கு, கேக்கவே வேண்டாம்.)

ஈழத்தமிழர்கள் மீது தமிழ்நாட்டில் அக்டோபர் கடைசி வாரத்தில் இருந்த பாசமிகுந்த உணர்ச்சி வேகம் போல, வேலைய ஆரம்பிச்சபோது கடகடன்னு சுத்தம் செய்ய ஆரம்பிச்சோம்.
ஒரு மணி நேரத்திற்கு அப்புறம், வீட்டு சொந்தக்காரர் – டேர்ந்து ஒரு அழைப்பு. வெள்ளையடிக்க வரவேண்டியவருக்கு உடம்பு சரியில்லையாம்.

இப்போ எங்க வேலையோட வேகம், ஈழப்பிரச்சினை மீதான தமிழகத்தின் நவம்பர் இரண்டாம் வார நிலைப்பாடு போல புஸ்ஸுன்னு போயிடுச்சி.

ஆனாலும் நண்பன் ஒருத்தனோட ஈடுபாட்டினால வீட்ட ஒரு வழியா சுத்தம் செய்தோம். நம்ம வலையுலக நடையில சொல்லணும்னா “வீட்ட சுத்தம் பண்ணி முடிக்கிறதுக்குள்ளே தாவு தீந்து போச்சு”.

இனிமேதான் நேற்றைய பதிவர் சந்திப்பு பற்றிய பக்கங்களையெல்லாம் தேடிப்பிடிச்சி படிக்கணும்.

மொக்கை பதிவுன்னாலும் ஒரு மெஸேஜ்:
“சமைக்கத் தெரியாத, வீட்டை சுத்தம் பண்ணத் தெரியாத அல்லது இவற்றை செய்யாத ஆண்கள் ‘பெண் விடுதலை, ஆண்-பெண் சமத்துவம்’ பற்றி பேசுவதற்கான பெரும்பாலான தகுதிகளை இழந்துவிடுகிறார்கள்”.

(பேச்சலர் - சரியான தமிழ் பதம் யாருக்காவது தெரிஞ்சா சொல்லுங்களேன்).

Saturday, November 15, 2008

தொலைந்து போனவன் - திரும்பவும்

வீட்ல ஒரு மாசத்துக்கு மேலா இணைய இணைப்பில இருந்த பிரச்சனையால இங்க வந்து ஊர் - மன்னிக்கணும் - இணையம் சுற்ற முடியல.

4-10-2008 வலைப்பதிவர் சந்திப்புக்கு அப்புறம் வலையுலகில் பட்டைய கிளப்பின பலவற்றை சூடா படிக்க முடியாமப்போயிடுச்சு, இதுதான் இப்போதைய வருத்தம்.

ஆங்ங்,,, அப்புறம் இந்த பதிவு எதுக்குன்னா 'நான் திரும்பவும் ஊர் சுற்ற வந்துட்டேன்னு' சொல்றதுக்காகவும்,

இதுக்காகவும்.

BSNL - இணைய இணைப்பு வச்சிருக்கிறவங்க ஏதாவது பி்ரச்சினை (இணைய இணைப்பு சம்பந்தமாகாங்க) இருந்தா - "என்ன பண்ணணும்? யாரை தொடர்பு கொள்ளலாம்?" இது போன்ற சந்தேகங்களுக்கு தாராளமா என்னை தொடர்பு கொள்ளலாம்.

Sunday, October 5, 2008

ஒரு அதிசயமான கல்லூரி பிரிவுபசார விழா!


அது சாதாரணமாக நீங்கள் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கக்கூடிய பிரிவு விழா அல்ல! அது எங்கள் ஆசிரியர்கள் மனமுவந்து எங்களுக்கு அளித்த கௌரவம் – திருவிழா. இன்றும் பசுமையான நினைவுகளோடு புல்லரிக்க(மயிர்க்கூச்செரிய) வைக்கிற நிகழ்வுகளை உள்ளடக்கியது.

2006 – ஏப்ரல் மாதத்தின் ஒரு நாளில் – இறுதி ஆண்டு மின்னணுவியியல் மற்றும் கருவியியல் (Electronics and Instrumentation Engineering) மாணவர்களாகிய எங்களிடம் “Farewell Party(பிரிவு விருந்து) வைச்சிருக்குப்பா, எல்லாரும் வந்திருங்க” என்று எங்கள் பேராசிரியர் சொன்னபோது, அது அப்படியே நடந்தபோது – எங்களுக்கு ஆச்சரியத்தை தவிர வேறெதுவும் தோன்றவில்லை.


முதல் காரணம்,
வழக்கமாக மாணவர்கள் தங்களுக்குள்ளே இந்த விழாவிற்கு ஏற்பாடு செய்து பின்பு ஆசிரியர்களை அழைப்பார்கள். ஆனால் ஆசிரியர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து எங்களை அழைத்தது.
இரண்டாவது,
கல்லூரி மேலிடத்திலிருந்தே, பிரிவு விழா (Farewell Day ) எல்லாம் கொண்டாடக்கூடாது, என்று அறிவித்திருந்த நேரத்தில் எங்களுக்கு மட்டும் வாழ்நாளிலே மறக்க முடியாத அந்த அனுபவம் கிடைத்தது.

அப்படி நாங்கள் என்ன செய்து விட்டோம் – எங்களுக்கு முன் இதே துறையில் (Department) படித்தவர்கள் செய்யாததை!

முதல் வருட இறுதியில், கல்லூரியிலேயே எங்கள் வகுப்பின் நிலைமைதான் மிகவும் மோசம். அனைத்து பாடங்களிலும் தேறியவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. விளையாட்டு மற்ற கல்லூரி அளவிலான Club activities (குழு நடவடிக்கைகள் - உதாரணம் JAYCEE, ROTARACT, RED CROSS & NSS) மிகக் குறைவு. போதாக்குறைக்கு எங்கள் துறை கட்டடத்திற்கு பட்டப்பெயர் கூட “பேய்வீடு”. மேலும், எங்கள் துறை எல்லா இடத்திலும் கடைசி நிலையிலும் ஒதுக்கிவைக்கப் பட்டதாகவும் இருந்தது.
இப்போதான் நாங்க இரண்டாவது ஆண்டுக்குள்ள அடியெடுத்து வைச்சோம்.
இது நல்ல விஷயமாண்ணு தெரியல, என்னண்ணா எங்க வகுப்பில உள்ளவங்க பெரும்பாலும் ஒண்ணாவே சேர்ந்து சுத்தினோம். விடுதியில் அரட்டையின்போது, நண்பர்கள் வீட்டுக்கு போகும்போது, சாப்பிடப்போகும்போது, இப்படி.

இந்த பழக்கம் எங்க வகுப்புல இருந்த எல்லாரையும் ஒரே அலைவரிசையில கொண்டு வந்தது. கல்லூரியோட எல்லா நிகழ்வுகள்லயும் பங்கெடுக்க ஆரம்பிச்சோம், எங்க துறை சார்ந்த நிகழ்வுகளை பெரிய விழாக்களா கொண்டாடினோம். தேர்வுகளுக்கான புத்தகங்கள் கட்டுரைகளை சேகரிக்கும்போது மொத்த வகுப்பையும் கவனத்துல எடுத்துகிட்டாங்க ஒரு சில நண்பர்கள். கல்லூரியில இருந்த கிட்டத்தட்ட எல்லா Club லயும் எங்க வகுப்பில இருந்து யாராவது ஒருத்தர் முக்கியமான பொறுப்புல வந்தாங்க. ஒரு கட்டத்தில கல்லூரி நிகழ்வுகள் எல்லாத்திலயும் எங்கள்ல ஒருத்தராவது பொறுப்பாளரா இருந்த நிலைமை வந்தது. படிப்புலயும் ஓரளவுக்கு முன்னாடி வந்தோம்.

ஆனா சாதாரணமா நடக்கக் கூடிய இந்த மாற்றங்களுக்காக, எங்களுக்கு எல்லா விதத்திலயும் உதவியா இருந்தது எங்க ஆசிரியர்கள்தான். கிட்டத்தட்ட காலேஜே ஒரு பள்ளிக்கூடம் மாதிரி ஆகிட்டிருந்த காலகட்டத்தில (இதைப் பத்தின என்னோட முந்தைய பதிவு இங்கே) எங்க துறை (Department) மட்டும் காலேஜாவே இருந்ததுக்கு காரணமும் இவங்கதான்.

அப்படிப்பட்டவங்ககிட்ட நாங்க கத்துகிட்டது பாராட்டு வாங்கினது எவ்வளவு மகிழ்ச்சியைக் கொடுக்கும்!!!

(படத்தில்: நடுவில் – பேராசிரியர் பிரம்மநாயகம், வலது – விரிவுரையாளர். அபுதாகிர் & இடது - விரிவுரையாளர். மோகன் குமார்) இவங்களை தெரிஞ்சுக்கணுமா? அப்போ வாங்க கோவில்பட்டிக்கு….

சென்னை பதிவர் சந்திப்பு(அக்டோபர் 4) - நானும் போயிருந்தேன்!

இவங்க எல்லாம் இங்க, இப்படி,

http://muralikkannan.blogspot.com/2008/09/4.html
http://www.athishaonline.com/2008/09/04-10-2008.html
http://venpu.blogspot.com/2008/10/blog-post.html
http://www.luckylookonline.com/2008/10/blog-post_03.html

எழுதின மாதிரி அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு நல்லபடியா நடந்து முடிஞ்சது.

http://dondu.blogspot.com/2008/10/04102008.html

நானும் கலந்துக்கிட்டேங்க!!!

அப்படியே, புகைப்படங்களை கிளிக்கித் தள்ளிய பாசக்கார பதிவர்கள் உடனே 'அக்டோபர் 4 - சென்னை பதிவர் சந்திப்பு - போட்டோ பதிவு' அப்படி ஏதாவது போட்டீங்கண்ணா நல்லாயிருக்கும்.

Saturday, September 20, 2008

சைக்கிளுக்கு ஹெல்மெட்டாஆஆஆஆ



இரண்டு வாரத்தி்ற்கு முன்பு என்னை மிதி வண்டியில் தலைக்கவசத்தோடு வேளச்சேரி தாம்பரம் சாலையில் பார்த்திருக்கலாம்!!!

(சும்மா – சைக்கிளுக்கு ஹெல்மெட் போட்டுட்டு போகணும்னு ரொம்ப நாள் ஆசை, அதான்)

இத பார்த்ததும் உங்களுக்கு என்ன தோண வாய்ப்பிருக்குன்னா….!!!!

1) சைக்கிளுக்கு ஹெல்மெட்டா – ஏதாவது பைத்தியமோ?
2) ஏதாவது பெட் கிட் வச்சிருப்பானோ?
3) சென்னை சைக்கோவா இருக்குமோ?
4) ரொம்ப வேகமா போறதா நெனப்போ?
5) ஹெல்மெட் போட சொல்லி விழிப்புணர்வு ஏதுமா?
6) சரியான பயந்தாங்கொள்ளியா(கோழை) இருப்பானோ?


நான் இப்படி போறத பார்த்துட்டு, பைக்ல போறவங்க சிரிச்சிட்டு போனது, office la Security ஒரு மாதிரியா பார்த்தது, ஒரு சின்ன பையன் 'சைக்கிளுக்கு ஹெல்மெட்டா' ன்னு கத்தினது, ரெண்டு பொண்ணுங்க 'ரோட் ஸேப்டி (Road Safety) ரொம்ப முக்கியம், அதுவும் இந்த மோசமான ரோட்ல' அப்படின்னு என்னை கடந்து போகும் போது 'க்ளுக்' னு சிரிச்சிகிட்டே பேசிட்டு போனது, இப்படி பல சுவாரசியமான சம்பவங்கள் நடந்துச்சி.

நீங்க கூட முயற்சி பண்ணலாம்..... ;)