Friday, March 12, 2021

எஞ்சாயி எஞ்சாமி வரிகள் (Enjoy Enjaami Lyrics)

ENJOY ENJAAMI LYRICS - Dhee | Arivu

குக்கூ குக்கூ
தாத்தா தாத்தா கள வெட்டி
குக்கூ குக்கூ
பொந்துல யாரு மீன் கொத்தி
குக்கூ குக்கூ
தண்ணியில் ஓடும் தவளைக்கி
குக்கூ குக்கூ
கம்பளிப் பூச்சி தங்கச்சி

அல்லிமலர்க் கொடி அங்கதமே
ஒட்டாற ஒட்டாற சந்தனமே
முல்ல மலர்க் கொடி முத்தாரமே.. (அப்டி)
எங்கூரு எங்கூரு குத்தாலமே

சுருக்குப் பையம்மா வெத்தல மட்டையம்மா
சொமந்த கையம்மா மத்தளம் கொட்டுயம்மா
தாயம்மா தாயம்மா என்ன பண்ண மாயம்மா
வள்ளியம்மா பேராண்டி சங்கதிய கூறேண்டி
கண்ணாடிய காணோண்டி இந்தார்றா பேராண்டி

அன்னக்கிளி அன்னிக்கிளி அடி அடி ஆலமரக்கெள வண்ணக்கிளி
நல்லபடி வாழச்சொல்லி இந்த மண்ணக் கொடுத்தானே பூர்வக்குடி
கம்மங்கர காணியெல்லாம் பாடித்திரிஞ்சானே ஆதிக்குடி
நாயி நரி பூனைக்குந்தான் இந்த ஏரி கொளங்கூட சொந்தமடி

எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

குக்கூ குக்கூ
முட்டைய போடும் கோழிக்கு
குக்கூ குக்கூ
ஒப்பனை யாரு மயிலுக்கு
குக்கூ குக்கூ
பச்சைய பூசும் பாசிக்கு
குக்கூ குக்கூ
குச்சிய அடுக்குன கூட்டுக்கு


பாடுபட்ட மக்கா வரப்பு மேட்டுக்காரா
வேர்வதண்ணி சொக்கா மினுக்கும் நாட்டுக்காரா
ஆக்காட்டி கருப்பட்டி ஊதாங்கோலு மண்ணுசட்டி
ஆத்தோரம் கூடுகட்டி  ஆரம்பிச்ச நாகரீகம்
சஞ்சன சனக்கு சன மக்களே
உப்புக்கு சப்பு கொட்டு முட்டைக்குள்ள சத்துக்கொட்டு
அட்டைக்கு ரத்தங்கொட்டு கிட்டிப்புல்லு வெட்டு வெட்டு

நான் அஞ்சுமரம் வளத்தேன்... அழகான தோட்டம் வச்சேன்...
தோட்டம் செழிச்சாலும்.... என் தொண்ட நனையலையே...

கடலே... கரையே... வனமே... சனமே... நெலமே... கொலமே... இடமே... தடமே...

எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

பாட்டன் பூட்டன் காத்த பூமி
ஆட்டம் போட்டு காட்டும் சாமி
ராட்டினம்தான் சுத்தி வந்தா சேவ கூவிச்சி
அது போட்டு வச்ச எச்சம்தானே காடா மாறிச்சு
நம்ம நாடா மாறிச்சு இந்த வீடா மாறிச்சு

என்ன கொற என்ன கொற
என் சீனி கரும்புக்கு என்ன கொற
என்ன கொற என்ன கொற
என் செல்லப் பேராண்டிக்கு என்ன கொற

பந்தலுல பாவக்கா பந்தலுல பாவக்கா
விதக்கல்லு விட்டிருக்கு அது விதக்கல்லு விட்டிருக்கு
அப்பனாத்தா விட்டதுங்க அப்பனாத்தா விட்டதுங்க


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி


எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி
எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒண்ணாகி
அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி

கடலே... கரையே... வனமே... சனமே... நெலமே... கொலமே... இடமே... தடமே...
குக்கூ குக்கூ 

Artist : Dhee ft. Arivu
Lyrics : Arivu
Producer :
Santhosh Narayanan
Director : Amith Krishnan (Studio MOCA)
Produced by : maajja
https://www.youtube.com/watch?v=eYq7WapuDLU

Tuesday, October 22, 2019

கீதையோ கீதை! பைபிளோ பைபிள்! குரானோ குரான்! - நூல் அறிமுகம்







இந்நூலானது,  மதங்களின் மீது, மறைந்த தோழர் புவனன் (நாத்திக மையம், நாகர்கோவில்) தொடுத்த கருத்தியல் யுத்தம்! ஒரு பெரியாரிஸ்ட் மதங்கள் மீது நடத்திய மறுவிசாரணை! பகவத் கீதை, பைபிள், குரான் மீதான கேள்விக்கணைகள்!
  • இந்து மதம் மட்டுமே விமர்சிக்கப்படுகிறதா?
  •  மதநூல்களின் கதைகள் அறிவுக்கு உகந்தவையா?
  • நாத்திகம் வேண்டும், ஏன்?
இதுபோன்ற வினாக்களுக்கு விடையாக இந்நூல் இருக்கிறது.


இந்நூலைப் பற்றி, மறைந்த தோழர் புவனன் அவர்களின் வரிகளிலேயே சொல்ல வேண்டுமானால்....

Monday, April 1, 2019

Super Deluxe (சூப்பர் டீலக்ஸ்) - The Movie

சில படத்துல ஒரு சில காட்சிகளப் பாக்கும்போது நெஞ்சுல ‘பக் பக்’குன்னு, மூளைல ‘கிர்ர்ர்ர்’ன்னு, ஒரு திகிலோட, பதட்டத்தோட இருக்குமே, இதையே படம் முழுக்கத் அள்ளித் தெளிச்ச மாதிரி ஒரு படம் பார்க்கணும்னு ரொம்பநாளா காத்திட்டு இருந்தது, Super Deluxe மூலமா நிறைவேறியிருக்கு.


படத்தோட ஒவ்வொரு நிமிசமும், திகிலும், பரபரப்பும், எதிர்பார்ப்பும், சுவாரசியமும் மாறி மாறி வந்து பரவசமூட்டுகிற ஒரு அனுபவம்! கடைசி நிமிசம் வரைக்கும் நெஞ்சுக்குள்ள ஒரு வெயிட்ட வைச்சி விட்ட மாதிரியான சம்பவங்கள்! சீட்டு நுனிக்கு வர்றதுன்னு சொல்வாங்கல்ல, சீட்டு இருக்குறதையே மறக்க வைக்கிறமாதிரியான அனுபவம்னா அது இதுதான்.

Tuesday, December 9, 2014

ஒடுக்குமுறைக்கு ஆளாகியுள்ள தமிழ் பிராமணாளின் அழுகுரல் - கத்திரி கேசாத்ரி

கத்திரி கேசாத்ரி சொல்றது என்னான்னா....

நரேந்திர மோடி கேபினெட்ல ரெண்டு பிராமணாள சேர்த்துண்டத பாராட்டினது நாட்ல பெரிய பிரச்சினையாயிடுது.

ஏதோ அந்த காலத்துல சொசைட்டில எங்களவாள்லாம் பெரிய இடத்துல இருந்தா. ஆனா இப்ப அப்படியா இருக்கு? எங்களவாளுக்கெல்லாம் ஏதோ  கொஞ்சோண்டுதான் பவர் இருக்கு. (என்ன பத்தாயிரம் இருபதாயிரம் புக்கு விக்குற அளவுக்கு இருக்குமா?) எண்ணிக்கைல எங்களவாள்லாம் கொஞ்சமாத்தான் இருக்கா! பொது இடத்துல பார்க்கக்கூட முடியாது. (ஆமா, அவாள்லாம் கார்ல போவா, பெரிய பெரிய மால்லதான் இருப்பா. சாதாரண மக்கள் இருக்குற இடத்துக்கு ஏன்  வரப்போறா?) இதே நிலமதான் தமிழ்நாட்லேயும்.

சுதந்திரம் வாங்குறதுக்கு முன்னாடியே, தமிழ்-தெலுங்கு பிராமின் சர்க்கார் உத்தியோகத்துல ஏகத்துக்கும் இருந்தா. எப்ப இந்த 'ஜஸ்டிஸ் பார்ட்டி'யும் 'திராவிடாள் குரூப்'பும் சேர்ந்துண்டு கோட்டாவ கொண்டு வந்தாளோனோ, அன்னிக்கே போச்சு. மெடிக்கல் சீட்ல நம்மவாளுக்கு இடம் இல்ல, கவர்மென்ட் உத்தியோகத்துலேர்ந்து, என்ஜினீரிங்க் காலேஜ்லேர்ந்தெல்லாம் மொத்தமா விரட்டியடிச்சுட்டா.(அப்புறம்?)

அரசியல்ல முழுசா எந்த அதிகாரமும் இல்லாம ஆக்கிட்டா. தமிழ்நாட்ல நடந்த இந்த அநியாயத்தெல்லாம் பார்த்துண்டு, எங்களவால்லாம் பம்பாய்க்கும் டெல்லிக்கும் வேலைக்குப் போனா. இதெல்லாம் 1970-ல (அச்சச்சோ, என்னா அடக்குமுறைக்கெல்லாம் ஆளாகியிருக்கா பாருங்கோ!). 1900-க்குப் பின்னாடி நிறைய இன்ஜினீரிங் காலேஜ் வந்தபின்னாடி, பிராமணாள்லாம் இன்ஜினீரிங்க படிச்சா அப்புறம் இந்த ஐ.டி. மேனேஜ்மென்ட்ல தேவை அதிகமானதுனால MBA படிச்சா. இன்னிக்கு ஐ.டி. மேனேஜ்மென்ட், ஆடிட்டிங்ல எல்லாம் நம்மாளுங்கதான் இருக்கா.

நிறைய பேரு யு.எஸ். போயிட்டா. பின்ன, அங்க சிலிக்கான் வேலி வளர்ச்சியெல்லாம் நம்மவளாவாலதானே. இந்தியாவுலயே நிறையபேரு தொழில் தொடங்கினா, ஐ.டி.புரட்சிக்கு வழிவகுத்தா.

என்னதான் நாங்கல்லாம் அரசியல்ல இருந்து விலகியிருந்தாலும், தமிழ்நாட்ல எதுக்கெடுத்தாலும் எங்களதான் திட்டுறா! மோடி பிராமினிக்கல்ங்குறா, ஜெயலலிதா கூடதான் பிராமினிக்கலா இருக்கா. ஆனா, இந்த திமுகவுக்கு மட்டும்தான், சான்ஸ்கிரிட்ட ப்ரோமோட் பண்ணாலும் பிராமினிக்கல், 'இந்தி'ய ப்ரோமோட் பண்ணினாலும் ப்ராமினிக்கல். எல்டிடிஈ-க்கு எதிரா பிஜெபியோ காங்கிரஸோ, யார் பேசினாலும் ப்ராமினிக்கல். மார்க்கெட் எகானமி, க்ளோபலைசேசன் கூட ப்ராமினிக்கல்ங்குறா.

தமிழ்ல படம் எடுக்குறாளோ இல்லியோ, இவால்லாம் எப்பவுமே எங்களவாள 'பேடா’தான் காட்டுறா. இப்பகூட 'ஜீவா'ன்னு ஒரு படம் வந்ததோணோ, அதுல கூட ஏதோ எங்களவா எல்லாம் சேர்ந்து சதி பண்ணிதான் அவாளயெல்லாம் ஸ்டேட் லெவல் டீம்ல விளையாடவிடாம பண்ணிட்டதா சொல்றா. பிராமின்ஸ்லாம் மத்தவங்கள 2000 வருஷமா அடக்கியாண்டாங்க, படிக்கவிடாம பண்ணிட்டாங்கன்னு சொல்றதெல்லாம் இப்ப பேஷனாயிடுத்து. அவா அவா இஸ்டத்துக்கு பேசறா. எதுக்கும் ஆதாரம் கிடையாது, அடுத்து எந்த ஆராய்ச்சியும் கிடையாது. (இந்த கட்டுரைக்கு எத்தன புள்ளிவிவரங்கள அம்பி கொடுத்திருக்கா? நீங்களே பாத்துக்கோங்கோ).

பிற்படுத்தப்பட்டவா பண்ற அடிதடிக்கெல்லாம்கூட நாங்கதான் காரணம்ங்குறா! இந்த சாதில்லாம் உருவாக்குனது நாங்கதான்தானாம், அதனால இதுக்கெல்லாம் நாங்கதான் பொறுப்புங்கறா. ஆனா, உண்மை அது கிடையாது.

புள்ளிவிவரங்கள்லாம் கூட இருந்தாலும் (ஆனா புளைளையாண்டன் கொடுக்கமாட்டன்!), அங்கங்க பாக்குறத காதுபட கேக்குறத வச்சி சொல்றேன், பிராமின்ஸ்தான் நிறைய இன்டர்-காஸ்ட் மேரேஜ் பண்ணியிருக்கா. நாங்கல்லாம் கௌரவக்கொலை பண்றது இல்ல பாருங்கோ.

நாங்கள்லாம்தான் இந்த மாநிலத்தோட கலையைப் பாதுகாக்குறோம், பழமையான நினைவிடங்களை சின்னங்களைப் பாதுகாக்குறோம், இந்த மாநிலத்தோட கலாச்சாரத்தையே பாதுகாக்குறோம் (என்னாதூ?). தமிழ் மொழி வளர்ச்சிக்கு எவ்வ்வளவோ பண்ணியிருக்கோம். அறிவியல், இன்ஜினீரிங், மெடிக்கல் அப்புறம் கல்விக்கு இந்த மாநிலத்துக்காக எவ்வளவோ பண்ணியிருக்கோம்.(ஓஓஓஓ அப்படியா?)

ஆனா, அரசியல்ரீதியா ஒதுக்கப்பட்ட, சமுதாயத்தால பழிக்கப்பட்ட இந்த தமிழ் பிராமணர்கள் அவங்களோட அடையாளத்த எப்படிப் பாதுகாக்கப்போறோம்னு தெரியல? அதேநேரத்துல பாதுகாப்பா எப்ப உணரப்போறோம்னும் தெரியல?

படிப்புலயோ, வேலைலயோ, அரசியல்லயோ பிராமணாளுக்கு எந்த இட ஒதுக்கீடும் கிடைக்க வாய்ப்பில்லே. எங்களவாளுக்கு வேண்டியதெல்லாம், மத்தவாளப் போல இந்த நாட்டுக்கு சேவைசெய்யுறதுக்கான வசதியான சூழல்தான். ஒரு லிபரல் நாட்ல, எப்படி மத்தவாள்லாம், அதான் இந்த முஸ்லிம், கிறிஸ்டியன்ஸ், பார்சி, ஜெயின்லாம், தங்களுக்குன்னு நம்பிக்கை, கலாச்சாரம், பழக்கவழக்கம், உடை, மொழின்னு இருக்காளோ, அதேமாதிரி தமிழ் பிராமின்ஸும் தங்களோட அடையாளத்தோட இருக்கணும்னு நினைக்குறா.
எங்களவாள பிராமினா இருக்க விடுங்கோ,
தமிழனா இருக்க விடுங்கோ,
இந்தியனாவும் இருக்க விடுங்கோ!

எங்களுக்கு எதிரான இந்த எதிர்ப்பு அரசியல் தமிழ்நாட்ல மாறணும்! (பஞ்ச் டயலாக்கா?)

Sunday, January 19, 2014

செல்லமுத்து குப்புசாமி சொன்ன கதை - இரவல் காதலி (நாவல்)

இதன்ஆசிரியர், ஐ.டி. துறையில் பணிபுரிபவர் என்கிற அறிமுகத்தின் காரணமாக, இந்த ஆண்டு படித்த இரண்டாவது நாவல் இது. (முதலாவது 'இராஜீவ்காந்தி சாலை')

இரவல் காதலி:




      தலைப்பே (ஒவ்வொரு அத்தியாயத்தின் தலைப்பும் கூட) கதையை உள்ளடக்கியிருக்கிறது.  மேலும் ஏற்கெனவே ஆங்கிலத்தில் வெளியாகிவிட்டதால், கதையைப் பற்றி இங்கு விரிவாக விவாதிக்கப்போவதில்லை.

நாவலுக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்ட தளத்தையும் கதையையும் அதற்கான எல்லையையும் தெளிவாக வரையறுத்துக்கொண்டு, நாவல் நேர்க்கோட்டில் பயணிக்கிறது - மிகச் சில இடங்களில் ஃபிளாஷ் பேக்கும் உண்டு. கதையினூடாகவே, ஐ.டி.துறையின் சில குறிப்பிட்ட விசயங்கள் பற்றி விளக்கியுள்ளார் ஆசிரியர். வேலைக்கு ஆள் எடுப்பது, புதிய ப்ராஜெக்ட்டுகள் பிடிப்பது  போன்றவை.  மற்றபடி, இது ஐ.டி.துறைக்குள்ளேயே நடக்கும் சம்பவங்களை அதிகம் உள்ளடக்கிய நாவல் இல்லை.


Sunday, January 12, 2014

விநாயக முருகன் சொன்ன கதை - ராஜீவ்காந்தி சாலை (நாவல்)

தனது துறை(ஐ.டி.) சார்ந்து, இப்படியான ஒரு நாவல் முயற்சிக்கும் அதற்கான உழைப்புக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் 'விநாயக முருகனு'க்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.




பலரும் பலவித கோணத்தில் அணுகும் புதிய(?!) துறையைப் (ஐ.டி.) பற்றிய கதை, என்று சொல்வதை விட, 'ராஜீவ்காந்திசாலை'யின் கதை என்றே சொல்ல வேண்டும். நாவலில், ஐ.டி. பற்றி பேசியதைவிட இந்தச் சாலையைப் பற்றித்தான் அதிகம் பேசப்பட்டுள்ளது(பெயருக்குப் பொருத்தம்தான்). ஆனால், 'பழைய மகாபலிபுரம் சாலை' என்றே பெயரிட்டிருக்கலாம். ஏனென்றால், இப்போது இந்தச் சாலையில் காணக் கிடைக்கும் மாற்றங்களில் பெரும்பாலானவை (ராஜீவ்காந்தி சாலை) பெயர்மாற்றத்திற்கு முன்பே நடந்தவைதானே!


Wednesday, December 4, 2013

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குப்பையைக் கொட்டி ஆக்கிரமிப்பு!!!

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் அழிக்கப்பட்டுக் கொண்டிருப்பது பற்றி ஏற்கெனவே செய்தித் தாள்களிலும், வலைப்பூக்களிலும் பலர் எழுதியிருக்கிறார்கள்.

ஆதங்கத்தில் எழுதப்பட்ட இடுகைகள் சில...
பள்ளிக்கரணை சதுப்பு நிலம் (நவ, 2009)
http://haripandi.blogspot.in/2009/11/blog-post_09.html

குப்பை மேட்டில் ஓர் வேடந்தாங்கல்! (மார்ச், 2010)
http://mvnandhini.wordpress.com/tag/%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D/

பள்ளிக்கரணை - சதுப்பு நிலக்காடு (2012) - விளக்கப் படங்களுடன் சிறப்பான பதிவு
http://www.raguc.com/2012/06/blog-post.html

செய்திகள் சில:
நவ, 2013-ல் வெளியான ஒரு செய்தி
முதல்வருக்காக விரைவில் வெற்றி விழா: நேரில் சந்தித்த "பெப்சி' நிர்வாகிகள் அறிவிப்பு
http://www.dinamalar.com/news_detail.asp?id=843291

//முதல்வருடனான சந்திப்பு குறித்து, அமீர் கூறியதாவது: தொழிலாளர்களின் கோரிக்கைகளை, 15 நிமிடங்களுக்கு மேலாக, முதல்வர் கவனத்துடன் கேட்டார். வெளி மாநிலத்தில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, இங்கு படப்பிடிப்பு தளங்கள் இல்லாத சூழ்நிலை, சென்னையில், படப்பிடிப்பு நடத்த முடியாத சூழ்நிலை, சம்பள உயர்வு ஒப்பந்தம் போடாதது என, எல்லா கோரிக்கைகளையும் கேட்டார். பின், கோரிக்கைகளை படித்துவிட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். நிச்சயம் நடக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. எங்களை சந்தித்த முதல்வருக்கு, 23 ஆயிரம் தொழிலாளர் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் சார்பில், நன்றி. சென்னையில், படப்பிடிப்பு நடத்த, அனுமதி கொடுத்திருப்பதாக, முதல்வர் தெரிவித்தார். தொழிலாளர்களுக்கு, வீடு கட்ட, பள்ளிக்கரணை அருகில், முதல்வர், 85 ஏக்கர் நிலம் ஒதுக்கி இருந்தார். அதன்பின் அந்த இடம், சதுப்பு நிலம் என்பது தெரிய வந்தது. இதனால், வீடு கட்ட முடியாத நிலை உள்ளது. இது தொடர்பாக, முதல்வர் பரிசீலிப்பதாக தெரிவித்துள்ளார்.//

பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தை மீட்க ரூ. 5 கோடி (யாரிடமிருந்து மீட்க?)
http://dinamani.com/edition_chennai/chennai/2013/04/11/%E0%AE%AA%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AE%A3%E0%AF%88-%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4/article1539543.ece

//சென்னை பள்ளிக்கரணையில் உள்ள சதுப்பு நில சூழலியலை மீட்டெடுக்க 2013-14ஆம் ஆண்டில் ரூ. 5 கோடியிலான திட்டம் செயல்படுத்தப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
பேரவையில் புதன்கிழமை தாக்கல் செய்யப்பட்ட வனத் துறை கொள்கை விளக்கக் குறிப்பில் இது குறித்து கூறப்பட்டிருப்பதாவது:
112 பறவை இனங்கள், 21 ஊர்வன இனங்கள், 9 நீர்நில வாழ் இனங்கள், 46 வகை மீன்கள், 7 வண்ணத்துப்பூச்சி இனங்கள் ஆகியவற்றுக்கு சென்னை பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வாழ்விடமாக உள்ளது.
2011-12 முதல் 2015-16 வரையிலான 5 ஆண்டுகளில் பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தின் சூழலியலை மீட்டெடுத்துப் பாதுகாக்க ரூ. 15.75 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. அதன்படி 2012-13-ம் ஆண்டில் உறைவிட மேம்பாடு, பாதுகாப்பு, ஆராய்ச்சி, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு போன்ற பணிகளுக்கு ரூ. 5 கோடி செலவிடப்பட்டுள்ளது.
2013-14ஆம் ஆண்டில் இத்திட்டத்துக்காக ரூ. 5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது.//

5 கோடி ரூபாய்க்கு என்ன பண்ணினாங்கன்னு கேட்காதீங்க! என்ன பண்ணிட்டு இருக்காங்கன்னும் கேட்காதீங்க! இனிமே என்ன பண்ணுவாங்கன்னும் கேட்காதீங்க.

பாதுகாப்பு, விளம்பரம் மற்றும் விழிப்புணர்வு-க்கு செலவு பணிணியிருக்கிறதா சொல்லியிருக்காங்க(உறைவிட மேம்பாடு, ஆராய்ச்சி - அப்படி எதுவும் நடக்குதா என்ன?). பழைய அறிவிப்புப் பலகைகளுக்குக் கொஞ்சதூரம் தள்ளி , சில புது அறிவிப்புப் பலகைகளை வைச்சிருக்காங்க.





(இந்த அறிவிப்புப் பலகையெல்லாம் வைக்கிறதுக்குப் பல லட்சம் அல்லது சில கோடிகள் ஆகும் பாருங்க!!)

விழிப்புணர்வுன்னு சொல்றாங்களே, அது யாருக்குத் தேவை? அங்கே குப்பை கொட்டுகிற அரசாங்கத்திற்கா, மாநகராட்சிக்கா? இல்லை சும்மா அந்த வழியா போகிற பொதுமக்களுக்கா?



டிச, 2013 -ல் எடுக்கப்பட்ட கூகிள் மேப் படம்

2007, 2008-களில் நான் கவனித்திருக்கிறேன். அப்போது குப்பை கொட்டப்பட்ட இடங்களிலிருந்து வெகுதூரம் சதுப்புநிலத்திற்குள் குப்பைமேடு(இப்போது) வந்துவிட்டது.

http://www.raguc.com/2012/06/blog-post.html - பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடக்கும் ஆக்கிரமிப்பு பற்றி, இந்தப் பதிவில் ரகு விரிவாக விளக்கியிருக்கிறார். மேலும் சில செய்திகளுக்கான சுட்டிகளும் இடுகையில் இடம்பெற்றுள்ளன.

இன்னும் சில ஆண்டுகளில், இந்த ஆக்கிரமிப்புகள் வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு, அரசே இந்தப் பகுதி நிலத்தை, வீட்டுமனைகளாக மாற்றி விற்றாலும் விற்கும்!!!

Monday, November 4, 2013

இப்படியாக, 'சரணாகதி'யடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் கமலஹாசன்

ஆமாம். 'ஜெயா டிவி'-யில் 02 நவ 2013 அன்று கமல் தோன்றி 'நடித்த' சிறப்புப் பட்டிமன்றத்தை (முன்)பின்வைத்து எழுதப்படுவதுதான் இந்த இடுகை.


இப்படியாக சரணாகதியடைந்தார் 'உலக நாயகன்' என்று அழைக்கப்படும் 'கமலஹாசன்'.

''தலைவா படம் திரையிடப்பட்டால் திரையரங்குகள் மீது தாக்குதல் நடத்தப்போவதாக மர்மக் கடிதம் மூலம் அச்சுறுத்தல்'' என்று கூறி, அந்தப் படத்தையே திரையிடாமல் செய்ததன் பின்னாலுள்ள அரசியல் பற்றி அறிந்தவர்களுக்கு, இந்த 'ஜெயா டிவி' நிகழ்ச்சியைப் பார்த்த அல்லது கேள்விப்பட்ட உடனேயே இது மனதில் தோன்றியிருக்க வேண்டும்.

ஆனாலும், இன்னமும் கமலைத் தூக்கி வைத்துக் கொண்டாடும் எழுத்துகளை இணையத்தில் காணும்போது......சில அடிப்படை விசயங்களை அவர்கள் கணக்கில் கொள்வதே இல்லை எனத் தோன்றுகிறது.

1. கமல் தற்போதைய போட்டி நிறைந்த சினிமா உலகில் ஒரு சிறந்த வியாபாரி
2. பெரிய அளவில் வியாபாரம் செய்வதற்காக அன்றி, புதிய தொழில்நுட்பங்களை தமிழ் சினிமா வளர்ச்சிக்காகவோ கலை தாகத்திற்காகவோ அவர் பயன்படுத்தியதாகத் தெரியவில்லை.
3. தனது வியாபாரத்திற்கு தடையாக யாராவது வருவார்கள் என்று தெரிந்தால் அவர்களுடன் எந்நேரமும் சமரசம் செய்யத் தயாராக இருப்பவர்.

விஸ்வரூபம் - 1 ல் ஏற்பட்ட பிரச்சினை அடுத்து வரவிருக்கும் இரண்டாம் பாகத்திற்கும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று இப்போதே 'துண்டு போட்டு' வைக்கிறார் தங்கத் தாரகை, புரட்சித்தலைவி, அம்மா, டாக்டர் செல்வி ஜெ.ஜெயலலிதா அவர்களிடம். அதற்கான முன்னோட்டம்தான் தீபாவளியன்று அரங்கேறிய பட்டிமன்றம். 

இந்த விசயத்தில் கமல் தன் சுயமரியாதையை அடகு வைத்திருக்கிறாரா இல்லையா? 'இல்லை' என்கிறார்கள் இப்போதும் கமல் ரசிகர்களாக இருப்பவர்கள். அவர்களைப் பொறுத்தவரையில் 'அம்மா காலில் விழுவது' மட்டும்தான் அடகுவைக்கிற வகையில் வருமோ என்னவோ! 'தலைவா' பட விவகாரத்தில், விசயம் வீதிக்கு வந்த பிறகு 'கொடநாடு' தேடி ஓடியவர் நடிகர் விஜய். 'விஸ்வரூபம்-2' விசயத்தில் படம் வெளிவரும் முன்பே 'போயஸ் கார்டன்' தேடி ஓடியிருக்கிறார் நடிகர் கமல். இரண்டுக்கும் என்ன பெரிய வித்தியாசம்?!

கமலை, 'கலைஞன்', 'உலக நாயகன்' என்றெல்லாம் அழைப்பதுபோல், 'வியாபாரி' என்றும் அழைப்பது பற்றி யோசித்தால் நல்லது!

***********

கமலின் 'ஜெயா டிவி' பட்டிமன்றம் குறித்து பலரால் எழுதப்பட்ட ட்வீட்டுகளிலிருந்து சில:

https://twitter.com/thoatta/status/396510227622678528
//மதசார்பற்ற மாநிலம் போவேன், நாடு போவேன்னு சொன்ன கமல் சார் கடைசில என்னவோ ஜெயா டிவி ஸ்டூடியோ தான் போயிருக்காரு//

https://twitter.com/senthilcp/status/396524923549523968
//சார், உங்க தமிழ் ஆசான் யார்? கமல் -= தி முக ஆட்சி நடந்தா கலைஞர் , அதிமுக ஆட்சி நடந்தா கண்ணதாசன்//

https://twitter.com/thirumarant/status/396508289674272768
//என்னை பற்றி பேச நானே எப்படி நடுவராவதுன்னு யோசிச்சேன்,(அப்பறம் அம்மா நினைவுக்கு வந்தாங்க ஒத்துக்கிட்டேன்) - கமல்//

https://twitter.com/senthilcp/status/396307140383502337
//நிருபர் - டி வி ல நடுவரா நீங்க? ஏன்? !! கமல் - நம்ம படம் பிரச்சனை இல்லாம ரிலீஸ் ஆகனும்னா எதுவும் தப்பில்லை # ஜெயா டி வி//

Friday, July 26, 2013

ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது ஓரளவிற்கு பிரபலமடைந்து வந்தாலும், இன்னமும், ஆண்ட்ராய்டு கைப்பேசி பயன்படுத்தும் நண்பர்கள் சிலர் இதில் தடுமாற்றத்தோடு இருப்பதைக் காணமுடிகிறது. பலருக்கு எப்படி 'ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் (இணைய இணைப்பு இல்லாமலேயே) தட்டச்சுவது?' என்பது தெரியாமலே இருக்கின்றது!

இதை விளக்குவதற்காகத்தான் இந்த இடுகை. முடிந்தவரையில் எளிமையாக, படிப்படியாக விளக்க முயன்றிருக்கிறேன். இந்த வழிமுறைகளை உங்கள் கைப்பேசிகளில் பயன்படுத்த ஆண்ட்ராய்டு 4.X.X பதிப்பு இருக்க வேண்டும். இதற்கும் முந்தைய ஆண்ட்ராய்டு பதிப்பு எனில்,  தமிழ் மொழியை காட்டுவதற்கான வசதியை அந்த கைப்பேசி தயாரிப்பாளரே ஆண்ட்ராய்டில் நிறுவியிருக்க வேண்டும் அல்லது ரூட்(Root) என்கிற முறையில் சில சித்து வேலைகளை நாமே செய்ய வேண்டும் (இதுபற்றிய தொழில்நுட்ப அறிவு எனக்கு இல்லை, எனவே ஆண்ட்ராய்டு 4.X.X க்கு முந்தைய பதிப்புகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி? என்பது  இந்த இடுகையில் விளக்கப்படவில்லை).


ஆண்ட்ராய்டு கைப்பேசிகளில் தமிழில் தட்டச்சுவது எப்படி?

1) ''கூகிள் ப்ளே'' சென்று "Tamilvisai" தரவிறக்கம் செய்து நிறுவவும்.

2) ''செட்டிங்க்ஸ்''-> ல் ''லேங்குவேச் அண்ட் இன்புட்'' செல்லவும் (Settings->Language and input)

3) ''தமிழ்விசை''(TamilVisai)-ஐ தேர்வு செய்யவும்

 4) தட்டச்சு(Type) செய்ய வேண்டிய இடத்திற்கு/பக்கத்திற்குச் செல்லவும் - புதிய குறுஞ்செய்தி(SMS) அல்லது மின்னஞ்சல்(E-Mail) தட்டச்சும் பக்கம் அல்லது இணைய உலவி(Browser)யின் பக்கம்.

5) ''நோட்டிஃபிகேசன்''(Notification Bar) பாரை கீழிறக்கி, ''சூசு இன்புட் மெத்தட்(Choose Input Method)'' ஐ கிளிக் செய்யவும்.

 6) ''தமிழ்விசை'' (TamilVisai) ஐ தேர்வு செய்யவும்

7) கீபோர்டில் தெரியும் ''த'' என்கிற நீல நிற விசையை அழுத்தவும்

8) தேவையான ''தட்டச்சு முறை''யைத் தேர்வு செய்யவும்
 குறிப்பு: 'ங்' விற்கு பதில் 'ஞ' என தவறாக மூன்றாவது வரிசையில் கொடுக்கப்பட்டிருக்கிறது.

 9) இப்போது தமிழில் விசைகளை அழுத்தி தட்டச்சவும். உங்களுக்குப் பிடித்த தட்டச்சு முறையில் தமிழில் எழுதலாம். கீழே இருக்கும் படத்தில் நீங்கள் பார்ப்பது ''தமிழ் 99'' முறையிலான விசைகள்.

இப்போது எங்கும் தமிழ்..


 


ஆண்ட்ராய்டில் தமிழில் தட்டச்சுவது பற்றி கூகிளிடம் கேட்டால், 
இந்தப் பதில் கிடைத்தது. இதையும் படிக்கவும்.
http://www.bloggernanban.com/2013/01/read-write-in-tamil-on-android.html

Monday, November 28, 2011

கலாம் வர்றார் - ''சொம்ப எடுத்து உள்ள வை''!

மக்களின் ஏகோபித்த ஆதரவு பெற்ற அரசாங்க விஞ்ஞானி அப்துல் கலாம், கூடங்குளம் போராட்டத்தில் தன்னால் ஆற்ற முடிந்த பங்கை ஆற்றிவிட்டுச் சென்றுவிட்டார்; இன்னும் தொடர்ந்து ஆற்றிக்கொண்டிருக்கிறார்.

அணுஉலையை எதிர்த்தவர்களில் கூட சிலபேர், இப்போது மதில் மேல் பூனையாக இருக்கிறார்கள். இருக்கட்டும்! 600 கி.மீ. தொலைவில் இருக்கும் இவர்களில் பெரும்பாலானோருக்கு கூடங்குளம் மக்களின் பீதியும், போராட்டத்தின் நியாயமும் புரிவது சிரமம்தான்.

(இணையத்தில் கிடைத்த்து, யார் வரைந்தது என்று தெரியவில்லை. ஊர் பெயர்கள் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளது)

என்னதான் இருந்தாலும், ''எவன் எப்படி போனா எனக்கென்ன, எனக்கு கரண்ட் வரணும், அவ்ளோதான்'' என்ற மனநிலையில் இருக்கும் மக்களை ஒன்றும் செய்ய முடியாது! சரி, இப்போது நம்ம ஹீரோ திரு. அப்துல் கலாம் அவர்களின் அறிக்கைக்கு வருவோம். பாதுகாப்பானது என்று விஞ்ஞான ரீதியாக விளக்கம் மட்டும் கொடுக்கும் அறிக்கையாக அது இருந்திருந்தால், நாம் இவ்வளவு தூரம் திருவாளர் அப்துல் கலாம் மீது கோபம் கொண்டிருக்க வாய்ப்பு இல்லை. ஆனால், கூடங்குளம் அணுஉலையைச் செயல்பட வைக்க, மக்களுக்குப் பணம் கொடுத்து காரியத்தைச் சாதித்துவிடலாம், மக்கள் மனதை மாற்றிவிடலாம் என்று இலவசம் கொடுக்கும் அரசியல்வாதிகளைப் போல், ஒரு சூப்பர் 10 அம்ச திட்டத்தை அறிவித்துவிட்டுச் சென்றிருக்கிறார். அங்குள்ள மக்கள் இதுவெல்லாம் கேட்காதபோது, அணுஉ(கொ)லைத் திட்டம் நிறைவேற வேண்டும் என்பதற்காக இதுபோன்று அறிவிப்பதெல்லாம் லஞ்சம் கொடுக்கும் முயற்சியில் வராதா? என்று நவயுக இந்தியன் தாத்தா 'அன்னா ஹசாரே' ஆராய்ந்து சொன்னால் நன்றாயிருக்கும்.

இது ஒருபுறம் இருக்கட்டும். இந்த 10-அம்ச திட்டங்களையும் தாண்டி, அப்துல் கலாமின் அறிக்கையில் இருக்கும் மற்ற சில விசயங்கள் மற்றும் விட்டுப்போன விசயங்கள் பற்றி காண்போம். முழு அறிக்கையும் இங்கே படிக்கக் கிடைக்கிறது. ஒருமுறை வாசித்துவிட்டு வாருங்கள்.

''ஏற்கனவே ஜெர்மனி ஒரு வளர்ந்த நாடு,  இதில் 2022 க்குள் ஜெர்மனி அதனுடைய அணுசக்தி மூலம் மின் உற்பத்தி செய்வதில் இருந்து வெளியில் வரும் முடிவு என்பது, அந்த நாட்டில் இருக்கும் யுரேனியத்தின் அளவு 2022க்குள் முடிந்துவிடும் என்ற இயற்கையான காரணத்தினாலே தவிர வேறு ஒன்றும் இல்லை. அதாவது, 2006 முதல் 2008 வரை மொத்த தேவையான 3332 டன் யுரேனியத்திற்கு பதிலாக, மொத்தமே 68 டன் யுரேனியம் தான் ஜெர்மனியில் இருந்து எடுக்க முடிந்தது, மீதி பற்றாக்குறைக்கு அது இறக்குமதியை நம்பி இருந்தது. எனவே இனிமேல் இறக்குமதி செய்தால் அது விலை அதிகமாகும் எனவே மரபு சார எரிசக்தி முறையில் அதிகம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும் அதற்கு அந்த நாட்டிலேயே அதன் தொழில் நுட்பம் கிடைப்பதாலும், உற்பத்தி செலவு குறைவு என்பதாலும், அதன் தேவைக்கு அதிகமாக மின்சார உற்பத்தி நடக்கும் என்ற தொலைநோக்கின் காரணத்தினாலும் மற்ற வகையில் மின் உற்பத்தி செய்யவோம் என்ற கொள்கை முடிவை எடுத்துள்ளது. ''


இப்படி அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. ஆனால், ஜெர்மனியிலிருந்து வரும் செய்திகள் அப்துல் கலாமின் இந்த கருத்துக்களோடு உடன்படவில்லை. அணுஉலைகளை மூடுவதான ஜெர்மனியின் முடிவு குறித்து, அந்நாட்டின் சான்சலர் 'ஆஞ்சலோ மெர்கெல்(Angelo Merkel)' தெரிவித்த வரிகள் கீழே தரப்பட்டுள்ளன.

''Step by step, we will abandon the nuclear energy by the end of 2022, is path of a big challenge for Germany. We believe that our country can become a front runner for the creation of renewable energy and as a first large industrial nation we can create such a change towards highly efficient and renewable energies with all  opportunities for export, development and technology which creates jobs. We believe that with these decisions, we have the opportunity to create the turn around toward the electricity of future. The German government and the coalition is ready to go down this path together".
மேற்கொண்டு விவரங்கள் வேண்டுவோர் சான்சலர் ஆஞ்சலோ மெர்கெல்-லின் அறிக்கையை இந்த விடீயோவில் http://www.youtube.com/watch?v=v2kchdJ_Z68 பார்க்கலாம். மரபுசாரா சக்தி உருவாக்கத்தில் முன்னோடியாக ஜெர்மனி இருக்க விரும்புவதாகக் கூறப்பட்டுள்ளது. அணுஉலைகளை மூடுவது என்ற முடிவானது, எதிர்கால மின்சாரத்திற்கான மாற்றுகளை உருவாக்க ஒரு வாய்ப்பாக அமையும் எனிகிறார் ஆஞ்சலோ மெர்கெல்

ஆனால், நம் எல்லோருக்கும் பிடித்தமான 'அப்துல் கலாம்' ஏன் வேறுமாதிரி அறிக்கையில் தெரிவித்திருக்கிறார்? இப்படியான தவறான கருத்துகளை அறிக்கையாக அவிழ்த்துவிடுவது ஒரு மகா மேதையான விஞ்ஞானி அப்துல் கலாம் போன்றவருக்கு அழகா?  சரி, ஒரு வாதத்துக்கு அவரது கூற்றுப்படியே வைத்துக்கொண்டாலும். யுரேனியம் இறக்குமதி செய்வது ஜெர்மனிக்கு மிகுந்த செலவு கொடுக்குமாம்!  அப்படியானால், இந்தியாவில் மட்டும் யுரேனியம் கொட்டிக்கிடக்கிறதா? நாமும் இறக்குமதிதானே செய்யவேண்டியுள்ளது? இவர் பேசுவதைப் பார்த்தால் யுரேனியத்திற்கே அதிக செலவு வைக்கவேண்டியிருக்கும் போலிருக்கிறதே! இந்தியாவிற்கு ஏற்கெனவே இருக்கும் கடன் சுமை போதாதா?  ஆனால், யுரேனியம்தான்  மலிவான எரிபொருள் என்று தலையில் அடித்துச் சத்தியம் செய்கிறார்களே நம்மூர் விஞ்ஞானிகள்!

'ஜெர்மனி யுரேனியம் பற்றாக்குறையினால்தான் அணுஉலைகளை இழுத்து மூடப்போகிறது' என்பது முழுப்பொய் என்பதை உணர்ந்துகொள்ள சமீபகால செய்திகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது.

http://www.bbc.co.uk/news/science-environment-15864806
//GlobeScan had previously polled eight countries with nuclear programmes, in 2005. In most of them, opposition to building new reactors has risen markedly since.In Germany it is up from 73% in 2005 to 90% now - which is reflected in the government's recent decision to close its nuclear programme//.


க்ளோப்ஸ்கேன் 2005-ம் ஆண்டு அணுசக்தி திட்டங்களை வைத்திருக்கிற எட்டு நாடுகளில் கருத்துக்கணிப்பு நடத்தியிருந்தது. 2011-ம் ஆண்டிற்கான தற்போதைய கணிப்பில், இந்நாடுகளில் பெரும்பாலானவற்றில், புதிய அணுஉலைகளைக் கட்டுவதற்கான எதிர்ப்பு கணிசமான அளவு அதிகரித்துள்ளது. ஜெர்மனியில் அணுஉலைகளுக்கான எதிர்ப்பு 2005-ம் ஆண்டில் 73%-ல் இருந்து இப்போது 90% ஆக அதிகரித்துள்ளது. இது, '2022 இறுதிக்குள் நாட்டின் அனைத்து அணுஉலைகளையும் மூடுவது' என்ற அந்நாட்டு அரசின் சமீபத்திய முடிவில் பிரதிபலித்துள்ளது.
ஆனால் 'அப்துல் கலாம்' ஜெர்மனிக்கு யுரேனியம் கிடைக்கவில்லை, அதனால் அணுஉலைகளை மூடுகிறது என்கிறார். மேலும் அவர் சொல்கிறார்,
மரபு சார் எரிசக்தி முறை ஜெர்மனியில் குறைவான செலவு பிடிக்கிறதாம்! அப்படியெனில் ஏன் இந்தியாவில் அந்த முறையைப் பயன்படுத்தக் கூடாது?  ஜெர்மனி தேர்ந்தெடுக்கிற மரபுசார் எரிசக்தி முறையை நாமும் கடைபிடித்தால் இன்னும் அதிகமான பணத்தை மிச்சப்படுத்தலாமே? கூடவே இன்னொரு நாட்டை நம்பி இருக்கவேண்டிய தயவும் இருக்காது. புதிய தொழில்நுட்பத்தைக் கண்டுபிடித்த மாதிரியும் ஆயிற்று. இளைஞர்களிடம் ''புதிய தொழில்நுட்பத்தை உருவாக்க வேண்டும்'' என்று மூச்சுக்கு முன்னூறு முறை சொல்லும் கலாம் அவர்கள், அணுஉலை தொழில்நுட்பத்தை மட்டும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதை ஊக்குவிப்பது ஏன்?

இன்னும் ஒரு செய்தி: 24 நவ-2011.
http://www.bbc.co.uk/news/world-europe-15883782
அணுக்கழிவுகளை ஏற்றிக்கொண்டு வந்த ஒரு ரயிலை மறித்து நடந்த போராட்டத்தில் போராட்டக்காரர்கள் போலீசாருடன் மோதல். எதற்காக போராட்டம்? அணுக்கழிவுகளைச் சேமித்துவைக்கும் கிடங்கு பாதுகாப்பானது இல்லை என்கிறார்கள் ஜெர்மன் நாட்டு மக்கள். போலீசாருடன் மோதும் அளவிற்கு அணுஉலை மற்றும் அணுக்கழிவுகளுக்கு எதிரான வலுவான போராட்டம் அங்கே அரங்கேறிக்கொண்டிருக்கிறது. 

'ஜெர்மனியின் அணுஉலைகளை மூடுவது என்ற அந்நாட்டு அரசின் முடிவின்'  பின்னணியில் 'அந்நாட்டில் யுரேனியம் தீர்ந்துவிட்டது' மட்டும்தான் காரணம் என்பது போன்ற தவறான வாதத்தை, தனது அறிக்கையில் தெரிவித்துள்ள திரு. அப்துல் கலாம் அவர்களின் ஒட்டுமொத்த அறிக்கையையும் எந்த அடிப்படையில் நம்புவது?!

பேசப்படாமல் விடப்பட்டது:
மின்கடத்தல் மற்றும் பரிமாற்றத்தில் ஏற்படும் இழப்பு. மத்திய அமைச்சரே கூறுகிறபடி இந்தியாவில் தயாரிக்கப்படும் மின்சாரத்தில் 34 சதவீதத்துக்கும் அதிகமாக வீண்டிக்கப்படுகிறது http://www.livemint.com/2010/08/23214133/Losses-in-transmission-distri.html.  அதாவது போகிறவழியில் கொட்டிக்கொண்டு இருக்கிறது. இதுவே அமெரிக்காவில் 7 சதவீதமும், தென் கொரியாவில் 4%  ஆகவும் இருக்கிறது. இதைக் குறைத்தாலே, மின்சாரத்தில், குறைந்தபட்சம் இன்னும் 5 ஆண்டுகளுக்காவது நாம் தன்னிறைவோடு இருப்போம்.

ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இதே கூடங்குளத்தில் அப்துல் கலாம் பேசியபோது (http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=20878) இந்த மின் இழப்பு பற்றி குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் இப்போது வெளியிட்டிருக்கிற அறிக்கையில் இதைப் பற்றி எதையுமே குறிப்பிடவில்லை. "மத்திய அரசின் நிர்பந்தந்தத்தின் பேரில் தான் இந்த அறிக்கையை வெளியிடவில்லை" என்று கூறும் அப்துல் கலாம், ஒரு விஞ்ஞானி மற்றும் முன்னாள் குடியரசுத் தலைவர் என்ற முறையில் அரசுத் தரப்பில் நடைபெறும் இதுபோன்ற பொறுப்பில்லாத தனத்தைச் சுட்டிக்காட்ட வேண்டுமா கூடாதா? இதுவெல்லாம் இந்தியா வளர்ச்சியடைவதைப் பாதிக்காதா என்ன? வளர்ச்சி பற்றி கவலைப்படும் இந்த விஞ்ஞானி, ஆண்டுக்கு 35,000 கோடி இழப்பு ஏற்படும் இந்த விசயத்தில் கவலைப்படாதது ஏன்?

அப்படியானால் அப்துல் கலாம் போன்றவர்கள் கவலைப்படும் வளர்ச்சி என்பது வெறும் GDP எண்களோடு நின்றுவிடுகிறதா?

ஆயிரக்கணக்கில் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின்(http://news.sky.com/home/world-news/article/16112805) நிலை என்ன? இந்தியாவின் வளர்ச்சியில் இல்லை, குறைந்தபட்சம் உயிர் வாழும் அடிப்படை உரிமையிலாவது அவர்களுக்கு பங்கு இருக்கிறதா? வளர்ச்சி வளர்ச்சி என்று திரும்பத் திரும்ப உபதேசித்து வரும் அப்துல் கலாம் அவர்கள் இவர்களுக்கு என்ன சொல்கிறார்? ஒருவேளை இவர்களெல்லாம் இந்தியர்கள் இல்லையோ?!

Tuesday, November 8, 2011

லஞ்சத்தை ஊக்குவிக்கும் அப்துல் கலாம்!

எதிர்பார்த்தது போலவே எல்லாம் நடக்கிறது!

A.B.J. அப்துல் கலாமுக்கு மக்களிடன் இருக்கும் செல்வாக்கைப் பயன்படுத்தி, கூடங்குளம் பிரச்சினையின் தீவிரத்தைக் குலைக்க அரசு செய்யும் முயற்சி பெருவெற்றி பெற்றுள்ளதுபோல் தோன்றுகிறது. அரசு சொல்லி தான் வரவில்லை என்று கலாம் மறுப்பு தெரிவித்துள்ளபோதும், இந்த பிரச்சினையில் தானாகவே தலையிட்டு, கருத்து சொன்னது மட்டுமில்லாமல் 36 பக்க அறிக்கையையும் கொடுத்திருக்கும் திரு. கலாம் அவர்கள், தமிழக மீனவர் பிரச்சினைக்காக இப்படி ஒரு அறிக்கை எங்காவது கொடுத்திருக்கிறாரா? என்று தெரிந்தவர்கள் விளக்கவும்.

தன் வாழ்நாள் முழுவதும் அரசு விஞ்ஞானியாக இருந்தவரும், 1998-ம் ஆண்டு அணுகுண்டு சோதனைக்கு முக்கியக் காரணியாகவும், அக்னி போன்ற ஏவுகணைகளுக்கான சோதனையில் பெரும்பகுதியையும் செலவிட்ட, இந்தியக் குழந்தைகளின் ஏகபோக ஆதரவு பெற்ற திரு அப்துல் கலாம் அவர்கள், 'தான் ஆடாவிட்டாலும், தன் சதையாடும்' என்பதை நிரூபித்துக் காட்டியிருக்கிறார்கள்.

அணுஉலை ஆதரவாளர்களுக்கு இது நல்ல தருணம். அப்துல் கலாமின் அறிக்கையை அவுலாகப் போட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு ஊடகங்கள் மென்று கொண்டிருக்கும்.

'கூடங்குளம் அணுஉலையால் எந்த ஆபத்தும் வராது' என்று அவர் கூறியதில் நமக்கு எந்த ஆச்சரியமும் ஏற்படவில்லை. ஆனால், கூடவே அறிக்கை என்ற பெயரில் 10 (11?)அம்சத் திட்டம் ஒன்றை அவர் முன்வைத்திருக்கிறார். அந்த திட்டங்களின் மதிப்பு 200 கோடி(?!)

இந்த அறிக்கை சார்ந்துதான் நமது கேள்விகள் எல்லாம். 

அப்துல் கலாம் அவர்களே,

*அணுஉலை பாதுகாப்பானதா இல்லையா என்பது பற்றிதானே கருத்துகூற வந்தீர்கள்? ஒரு விஞ்ஞானியாக, பாதுகாப்பு குறித்தான கருத்து மட்டும் சொல்லிவிட்டுப்போகாமல், 10-அம்சத் திட்டம் என்பதை எதற்காகத் தயாரித்து வழங்கினீர்கள்?

*நீங்கள் குறிப்பிட்டுள்ள திட்டங்களில்,  அரசாங்கம் மக்களுக்குச் செய்து தந்திருக்க வேண்டிய அடிப்படை விசயங்களும் அடங்கியுள்ளன. இத்தனை நாட்கள் அதைச் செய்துதராதது எதனால்?


*அப்படியானால் அடிப்படை உரிமைகளே, அணுஉலை போன்ற பேரழிவு திட்டங்களை எதிர்த்தால்தான் கிடைக்குமா இந்நாட்டில்?


*14,000 கோடி மதிப்பிடப்பட்டுள்ள அணுஉலை திட்டத்திற்கு,  மக்களுக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமாக நீங்கள் கருதுவதுதான் ரூ.200கோடி மதிப்புள்ள உங்களது 10 அம்சத் திட்டங்களா?

*குழந்தைகளிடம் 'லஞ்சம் வாங்கும் உங்கள் பெற்றோர்களைக் கண்டியுங்கள்' என்று கூறும் நீங்கள், அணுஉலை எதிர்ப்பு இன்றி இயங்குவதற்கு, அரசாங்கத்தையே லஞ்சம் கொடுக்கத் தூண்டுவது எந்த விதத்தில் நியாயம்?

*'என்ன செய்தாவது ஒரு விசயத்தை நிறைவேற்று' என்பதுதானே லஞ்சத்திற்கு மூலம். உங்களுடைய 10 அம்சத் திட்டமும் இதே விதத்தில்தானே இருக்கிறது?

*********

ஜெர்மனி, மின்உற்பத்தியில் அணுஉலையின் தேவையின்றியே தன்னிறைவு பெற்றுவிட்டதாகச் சொல்லும் நீங்கள், அங்கு நடைமுறையில் உள்ள முறைகளை ஏன் இந்தியாவும் பரிசீலிக்குமாறு பரிந்துரைக்கக்கூடாது? 


ஜெர்மனிக்கு வேண்டாம், இந்தியாவுக்கு மட்டும் அணுஉலை வேண்டுமா?!

அழிவு விஞ்ஞானி அப்துல் கலாம் அவர்களே, நீங்கள் மக்களிடம் இருந்து வெகுதூரம் விலகிச்சென்று கொண்டிருக்கிறீர்கள் என்பதை எப்போது உணரப்போகிறீர்கள்?
*********

எங்களுக்குத் தேவை, மக்கள் பயந்துவாழும் ஒரு வல்லரசு நாடு அல்ல! அமைதியாக வாழும் நல்லரசே!

Wednesday, November 2, 2011

ராவா ஒரு Ra-One விமர்சனம்!

ஏதோ ரோபோ படமாம்…. ஆர்ட்டிஃபிஸியல் இன்டெலிஜன்ட்ஸாம்…. விர்ச்சுவல் வேர்ல்டாம்…. இன்விசிபிள் ரேய்சாம்…. ஈவிலாம்… குட்டாம்…. பைட்டாம்…. பாட்டாம்…. ரொமான்ஸாம்…. சென்டிமென்டாம்….

**********************************************************************************

குழந்தைகள் மற்றும் இளைஞர்களுக்கான கம்ப்யூட்டர் கேம்ஸ் வடிவமைக்கும் ஒரு நிறுவனத்தில் பணிபுரிகிறார் மக்கு ஜீனியஸான(!) ‘அப்பா’ என்று அழைக்கப்படும் சேகர். இந்த ம(க்)கா ஜீனியஸ், வடிவமைக்கும் ஒரு ரியல்+விர்ச்சுவல் கேம் வேர்ல்டில் இருந்து வெற்றிகாணவே முடியாத, யாராலும் அழிக்கவே முடியாத ஒரு வில்லன் மற்றும் அவனை எதிர்க்கும் ஹீரோ இருவரும் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுதான் கதை.

****

>>>முதல்பாதியில் வில்லன் நம்முடைய ரியல் வேர்ல்டுக்குள் நுழைவதுவரை கொடுத்த பில்டப்புக்கு, இரண்டாம் பாதியில் ஓண்ணும் வொர்த் இல்லீங்கோ!!!

மை கொஸ்டின்ஸ்:
????ஏனுங்க, ஏதோ சயின்ஸ் ஃபிக்சன்னு சொன்னீங்கோ, ஆனா சயின்ஸ் எங்கேங்க இருக்கு? பேருமட்டும் டெக்னிக்கலா கொடுத்தா போதுமா?

????கம்ப்யூட்டர் கேம முழுசாவே டெஸ்ட் பண்ணல, அதுக்குள்ள மார்க்கெட்டுக்கு போகுதே அது எப்புடி?

????விர்ச்சுவல் கம்ப்யூட்டர் கேம்தானே பண்ணுனீங்க? அதுக்கு ஒருசில சென்சார்ஸ் அண்டு கன்ட்ரோலர்ஸ்தான் தேவை! ஆனா எங்கேயிருந்து ஒரு முழு ரோபோவுக்கான பார்ட்ஸ் செஞ்சீங்க? அந்த கார்ட்(HART) கார்ட்-டுன்னு சொல்றீங்களே, அதுக்கும் கேம் விளையாடுறவங்களுக்கும் என்ன சம்பந்தம்?

????டெவலப்மென்ட் இடத்தையே துவம்சம் பண்ணிட்டு போயிட்டடாரு வில்லன், ஆனா ஒரு ஃபயர் அலார்மோ வேற ஏதுமோ இல்லை. அட அத விடுங்க, பலநாளா அந்த இடத்தையே ஆரும் எட்டிக்கூடப்பார்க்கலை! போலீஸே வரலீங்கோ. அது எப்படிங்கோ?!

????”பைத்தியக்காரன்… பைத்தியக்காரன்” என்று பின்னணியில்(ஷாரூக் இன்ட்ரோ!) பாடுவதாகட்டும் ”ஐயோ” என்று பின்னணி வருவதாகட்டும், சில தமிழ் வார்த்தைகளை வைத்து இரட்டை அர்த்த காமெடிகளைத் தூவுவதாகட்டும், இந்த படத்துல இதுக்கு என்னாங்க அவசியம்??!!

கவனித்தவை:
ஒரு காட்சியில் தமிழக முதல்வர், இதயதெய்வம், கழகத்தின் நிரந்தர பொதுச்செயலாளர், தங்கத்தாரகை, புரட்சித்தலைவி, டாக்டர் செல்வி.ஜெ.ஜெயலலிதாவை - சும்மா ஜுஜூபியாக கிண்டல் செய்துவிட்டுப் போகிறார்கள்! கூடியவிரைவில் ஹிந்தி படம் பார்க்கும் ரத்தத்தின் ரத்தங்கள் பொங்கி எழுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

ரா-ஒன். திரும்ப திரும்ப சொல்லுங்க…ராஒன்-ராஒன்-ராவண், நம்ம ராவணனுங்க(நான் சொல்லலீங்க! படத்துலயே சொல்றாங்க). இந்த விர்ச்சுவல் வேர்ல்ட் இராவணன்(Ra-One), தசரா அன்று எரிக்கப்படும் ரியல் வேர்ல்ட் ராவணணுடைய தலைக்குப் பொருந்தி நடந்துவரும் காட்சி! சூப்பர்!

வரலட்சுமி நோன்பு வர்ற நாளுக்கும் தசரா வர்ற நாளுக்கும் எவ்ளோஓஓஓ இடைவெளி இருக்கு! ஆனா படத்துல அடுத்தடுத்து ஒண்ணோ ரெண்டோ நாளுக்குள்ள வர்ற மாதிரி இருக்கு! யாராவது கவனிச்சீங்களா?

ரஜினி ஏதோ சீன்ல வர்றாராமே:
பாவம். மேக்கப் கோளாறு, மொக்கை டயலாக்(வேற ஏதாவது உருப்படியா பேசக் குடுத்துருக்கலாம்) என்று ரஜினியை கிரியேட்டிவாக பயன்படுத்தாவிட்டாலும், அந்தக் காட்சிக்குக் கொடுத்திருக்கும் பில்ட்-அப், பரவாயில்லை!

சயின்ஸா சாமியா?
இந்த விசயத்தில் நம்மில் நிறைய பேருக்கு எப்போதுமே ஒரு குழப்பம் இருக்கும்! ஒண்ணு சயின்சுன்னு சொல்லணும், இல்லேன்னா சாமின்னு சொல்லணும். ஹீரோ தன் பலம் முழுவதையும் காட்டி ரயிலை நிறுத்திவிடும் காட்சியின் கடைசி வினாடியில், பின்புறம் சாமி சிலையைக் காட்டிவிடுவது! (அப்போ என்னாத்துக்கு ஹீரோவுக்கு பவர், கிவர், கார்ட், அது இதுன்னு அவ்ளோ பில்டப் கொடுக்கணும்?!) சயின்சுக்கும் சாமிக்கும் முடிச்சுப்போடும் வேலையை இந்தப் படத்திலும் பண்ணியிருக்கிறார்கள்.

சூப்பர்:
கிராஃபிக்ஸ்! ஒளிப்பதிவு!

மொன்னை:
இதை சயின்ஸ் பிக்சன்னு சொல்றது! இரண்டாம் பாதி திரைக்கதை!

பரிதாபம்:
இங்கேயும் மின்சார ரயிலில் நாயகியைக் காப்பாற்றுகிறார் ஹீரோ ரோபோ(இல்ல, கேம்லேருந்து வந்த ப்ரோக்ராம்?!). அந்த காட்சியில், ரயிலில் தொங்கி தொங்கி முன்னேறுவது…! ‘‘ஏம்பா, நம்ம ரஜினி எந்திரன்ல எம்புட்டு அழகா ரயில்மேல ஓடி வந்தாரு” என்று சொல்ல வைத்துவிடுகிறது!
*********************************************************************************

என்னமோ போங்க, இதுக்கு எந்திரனே பரவாயில்லை! ”அப்டிக்கா பண்றோம், இப்டிக்கா பண்றோம்னு, உருண்டு புரண்டு பண்றோம், ராவா பண்றோம்”னு சொல்லி நம்ம காச ஆட்டைய போடுறதே இந்த சூப்பர் ஸ்டாருங்களுக்கு வேலையாப் போச்சு!!!!

இது குழந்தைகளுக்கான படம் இல்லீங்கோ!

Saturday, October 15, 2011

"புதிய தலைமுறை"யின் அபத்தம்!

'அணுவின்றி' என்று தலைப்பிட்டு இந்தவார 'புதிய தலைமுறை(!)' (20 Oct 2011) தலையங்கம் எழுதியுள்ளது.

அதிலிருந்து சில வரிகள்...

//தமிழகம் மின்பற்றாக்குறையிலிருந்து விடுபட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி மின்சார உற்பத்தியை அதிகரிப்பதுதான். அதுவும் கணிசமான அளவு பெருக்குவதுதான். தமிழகத்தில் பாயும் நதிகளின் நீர்வரத்து, அண்டை மாநிலங்கள் அனுமதிப்பதைப் பொருத்து இருக்கிறது. காற்று ஆண்டு முழுவதும் கிடைக்காது. சூரிய சக்தி மூலம் உற்பத்தி செய்வது அதிகச் செலவும் இடமும் பிடிக்கும். இவை எதைக் கொண்டும் கணிசமான அளவு மின்னுற்பத்தி செய்ய இயலாது. நிலக்கரி, பெட்ரோல் விளி மண்டலத்தில் கரிப்படலங்களை ஏற்படுத்தி பருவ நிலையில் மாற்றங்களை ஏற்படுத்தும். இந்தச் சூழலில் அணு மின்சாரம்தான் கணிசமான உற்பத்திக்கான வழி...//

//ஓடுகிற ஆறு, ஓசையிடும் கடல், அடுப்பில் எரியும் நெருப்பு, மின்சாரம், போக்குவரத்து, இயந்திரங்கள், ஏன் உண்ணும் உணவில் கூட விபத்துக்கான சாத்தியங்கள், பக்க விளைவுகள் உண்டு. அதற்காக அவையே வேண்டாம் எனச் சொல்லி விடுவோமா? தினம் சாலை விபத்துகளைப் படிக்கிறோம். பயணங்களை நிறுத்தி விட்டோமா? ரயில்கள் விபத்துக்குள்ளாகின்றன எனத் தெரிந்தும் ஏன் முன்பதிவில் இத்தனை முண்டியடித்தல்?

உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துகொண்டு உற்பத்தியில் இறங்குவதுதான் நடைமுறைக்கு ஏற்றது. கூடங்குளப் போராட்டக் குழுவினர் எந்த மாதிரியான பாதுகாப்பு வேண்டும் எனக் கேட்டுப் பெறட்டும். அதை விட்டு பேச்சுவார்த்தையே நடத்தமாட்டோம், வல்லுநர்கள் உட்பட யார் சொன்னாலும் அதற்கு செவி மடுக்கமாட்டோம், அணுமின் நிலையத்தை மூடியே ஆக வேண்டும் எனக் கோருவது நியாயமானதல்ல. //

*******

அணுஉலையின் ஆபத்துகளை அறிந்துகொண்டு விழிப்புணர்வு பெற்று, உலகமே அணுஉலை வேண்டாம் என்கிற நிலைக்குச் சென்று கொண்டிருக்கும்போது,'புதிய தலைமுறை' (இனியொரு விதி செய்வோம்!) என்று பெயரை வைத்துக்கொண்டு, வெற்றிலை மெல்லும் பழையகால பாட்டிபோல ஒரு பக்கத்திற்கு புலம்பி வைத்திருக்கிறது. 

உலகத்தில் பல இடங்களிலும் மாற்று எரிபொருள், இயற்கை எரிபொருள், சூரிய சக்தியைப் பயன்படுத்துதல், உயிரியல் எரிபொருட்கள் என்று ஆராய்ச்சிகள் முடுக்கிவிடப்பட்டிருக்கும் இக்காலத்தில், அதற்கான உந்துதலை இங்கிருக்கும் மிகப்பெரிய சக்தியான இளைய சமுதாயத்திடம் விதைக்காமல்,  இயற்கை/மாற்று ஆற்றல் ஆராய்ச்சிகளில் இந்திய இளைஞர்களின் பங்கு என்ன? என்று கேள்வி கேட்காமல், இளைஞர்களிடம் அபாயகரமான அணுவின் மீது மோகத்தை விதைக்கிறது 'புதிய தலைமுறை(!)'.

இனி வரும் காலத்தில் இந்திய மக்களுக்குத்தான் அதிய மின்னாற்றல் தேவைப்படும். அதற்காக இந்தியா முழுவதும் அணுஉலைகள் வைத்தாலும் 10% ஆற்றல்தான் அதிலிருந்து பெறமுடியும் என்பது இந்த அணுஉலை வல்லுநர்களே ஏற்றுக்கொள்ளும் உண்மை. கோடிக்கணக்கான மக்களையும் அவர்களின் தலைமுறைகளையும் பணயம் வைப்பது வெறும் 10% ஆற்றலுக்காகவா? என்று கேள்வி எழுப்பாமல் இப்படி எழுதியிருப்பது, 'புதிய தலைமுறையினரை', 'புழுத்த தலைமுறையினராக' மாற்றவா?

Tuesday, September 27, 2011

சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக...


சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராக ஆயிரம் குரல்களைத் தாங்கி வருகிறது இந்தப் பறையடி...




பரமக்குடி தலித் படுகொலைகள் - கருத்தரங்கு
தேவநேயப் பாவாணர் அரங்கம், அண்ணாசாலை, சென்னை.
24 செப்டம்பர் 2011.
புத்தர் கலைக்குழுவினர் நிகழ்த்திய பறையடியில் இருந்து ஒரு பகுதி.....


Thursday, September 1, 2011

சென்னை உயர்நீதிமன்றத்தின் வரலாற்றில் ஒருநாள்!

கடந்த செவ்வாயன்று மரண தண்டனை நாள் குறிக்கப்பட்ட 'பேரறிவாளன், சாந்தன் மற்றும் முருகன்' இவர்களது தண்டனையை 8 வாரங்களுக்கு நிறுத்திவைக்கக் கூறி, இடைக்காலத் தடை பிறப்பித்தது சென்னை உயர்நீதிமன்றம். இந்த வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்விற்கு சில வினாடிகளுக்குப் பின்னர் நீதிமன்ற வளாகத்தில் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான தமிழர்களின் மகிழ்ச்சிக்கொண்டாட்டங்கள் இதோ புகைப்படங்களாக.

மூன்று தமிழர்களையும் விடுவிப்பதில் கிடைத்திருக்கும் ஒரு முதல்கட்ட வெற்றியைக் கொண்டாடுகிறபோது உணர்ச்சிவெள்ளத்தில் சென்னை உயர்நீதிமன்ற வளாகம் மிதந்ததை இந்தப் படங்களில் பார்க்கலாம்!






இதைத்தொடர்ந்து கோயம்பேட்டில் உண்ணாவிரதப் பந்தலின் முன்பு தமிழார்வலர்கள் இனிப்பு வழங்கியும் மேளதாளத்தோடு ஆடிப்பாடியும் கொண்டாடினார்கள்.



ஐந்துநாட்களாகத் தொடர்ந்து உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த வழக்கறிஞர்கள் வடிவு, கயல் மற்றும் சுஜாதா - 'மரண தண்டனைக்கு இடைக்காலத் தடை' தீர்ப்பு கேள்விப்பட்டதும், மகிழ்ச்சியில்! 

Sunday, August 28, 2011

போர்க் குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றம் - அறிமுகக் கூட்டம்


சேவ்-தமிழ்சு முயற்சியால், ஜூன்-2 ல் பெங்களூரூவில் தொடங்கப்பட்ட, 'போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைக்கு எதிரான மன்றம்' மூலம் பல்வேறு மாநில(கர்நாடகா, ஆந்திரா, மேற்கு வங்காளம், டெல்லி, மகாராஷ்டிரா மற்றும் கேரளா) மனித உரிமை மற்றும் மக்கள் இயக்கங்களின் ஆதரவை, இலங்கையில் நடைபெற்ற போர்க்குற்றங்களுக்கு எதிராகத் திரட்டி வருகிறது. அதன் மையமாக, நேற்று மன்றத்தின் தமிழ்நாடு பிரிவின் சார்பாக 'பத்திரிகையாளர்கள் சந்திப்பு' மற்றும் அறிமுகக் கூட்டமும் நடைபெற்றது. 

மாலை 3 மணியளவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் ஏராளமான ஊடகங்கள் கலந்துகொண்டு, மன்றத்தின் தமிழக வரவை நல்வரவாக்கிவிட்டன.  

மன்றத்தின் அரங்கக் கூட்டம் ''தெற்காசிய அரசுகளும் மானுட நீக்கமும்!'' என்ற தலைப்பில் மாலை 6:00 மணியளவில், தெய்வநாயகம் பள்ளி, தியாகராய நகரில் வைத்து நடைபெற்றது. தமிழினப் படுகொலை புரிந்துவரும் இலங்கை அரசு, நீதியற்ற முறையில் மரண தண்டனை விதிக்கும் இந்திய அரசு, இவற்றை முன்னிருத்தி கூட்டத்திற்கான தலைப்பு தெரிந்தெடுக்கப்பட்டிருந்தது. 

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தில் மற்ற மாநில பிரிவுகள் சார்பில் வெவ்வேறு மாநில பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். 

1.திரு. ஆஸிஸ் - ஜனநாயக உரிமைகளுக்கான மக்கள் இயக்கம், டெல்லி
2. வழக்கறிஞர்.சந்திரசேகர் - ஆந்திரப்பிரதேச சிவில் லிபர்டி கமிட்டி(APCLC), ஆந்திரா
3. பேராசிரியர்.மணிவண்ணன் (சென்னை பல்கலைக்கழகம்)
4.திரு.கண.குறிஞ்சி -மக்கள் ஜனநாயக குடியியல் ஒன்றியம் (PUCL)
5. தோழர்.தியாகு - தமிழ்த் தேசிய விடுதலை இயக்கம்

இவர்களோடு, 
மும்பை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி. திரு.H.சுரேஷ் அவர்கள் கலந்துகொண்டு மரண தண்டனைக்கு எதிராக தன்னுடைய வலுவான எதிர்ப்பைப் பதிவு செய்தார். 

நிகழ்விலிருந்து சில படங்கள் உங்கள் பார்வைக்கு...










மரணதண்டனைக்காகச் சிறையில் காத்திருக்கும் மூவரில் ஒருவரான பேரறிவாளன் அவரின் தாய்.

மும்பை, முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதி. H.சுரேஷ் அவர்கள் பேசியதை தோழர்.தியாகு மொழிபெயர்த்தார்.


மரண தண்டனைக்கு எதிராக வழக்கறிஞர்கள் போராட்டம் - 2ம் நாள்

பேரறிவாழன், சாந்தன் மற்றும் முருகன் இம்மூன்று தமிழர்கள் சார்பாக குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட்டிருந்த கருணை மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து செப்டெம்பர் 9, அதிகாலை - தண்டனை தேதியாகக் குறிக்கப்பட்டது.

இம்மூன்று தமிழர்களின் மரண தண்டனையை ரத்துசெய்யக்கோரி, மூன்று வழக்கறிஞர்கள் வெள்ளிக்கிழமை சென்னை உயர்நீதிமன்ற வளாகத்திலேயே காலவரையற்ற உண்ணாவிரதத்தைத் தொடங்கினார்கள். நேற்று(சனிக்கிழமை) இந்த உண்ணாவிரதம் கோயம்பேடு, ஆக்ஸிஸ் வங்கி அருகே தொடர்ந்து நடைபெற்றது. ஆர்வலர்களும் ஊடகங்களும் நிறைந்திருந்த உண்ணாவிரதத் திடலில் இருந்து சில புகைப்படங்கள்.







Wednesday, July 6, 2011

போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிராக!

சேவ்-தமிழ்ஸ் (http://save-tamils.org) முயற்சியால், கடந்த ஜூன் 2 ஆம் தேதி பெங்களூரூவில், கேரள, ஆந்திர, கர்நாடக மற்றும் தமிழக மனித உரிமை அமைப்புகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஒன்றிணைந்து ‘போர்க்குற்றம், இனப்படுகொலைக்கு எதிரான மன்றத்தைத்(“Forum against War Crimes and Genocide”) தொடங்கின. அதன் தொடர்ச்சியாக, மன்றத்தின் கர்நாடகக் குழு(Forum Against War Crimes and Genocide - Karnataka State Committee), சார்பில் ஜூலை 2, பெங்களூருவில் நடைபெற்ற கருத்தரங்கத்தில் கர்நாடகாவைச் சேர்ந்த பல்வேறு மனித உரிமை அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்று இலங்கையில் நடந்த தமிழினப் படுகொலை குறித்து தங்கள் கருத்துக்களைப் பதிவு செய்து ஈழத் தமிழர்களுக்கு தம் ஆதரவை வழங்கினர்.

மன்றத்தின் கர்நாடகக் குழுவில்: மக்கள் சனநாயக முன்னணி(PDF), தலித் சுயமரியாதை இயக்கம்(DSR), பெடஸ்ட்ரியன் பிக்சர்ஸ்(Pedestrian Pictures), கர்நாடக மாணவ அமைப்பு(KSO), கர்நாடக ஜன சக்தி & கர்நாடக வித்யார்தி வேதிகே, சமதா மகிள வேதிகே (All India Progressive Women’s Association), புதிய சோஷலிச மாற்று - Tamils solidarity, மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பு(NCHRO) மற்றும் அனைத்து கர்நாடக தமிழ் அமைப்புகள் உள்ளன.

மாலை 4:30 மணியிலிருந்து 8:30 வரை நடந்த நிகழ்வில் சுமார் 100 பேர் கலந்துகொண்டனர். இதில் பெரும்பாலானோர் கன்னடர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. நிகழ்வு முழுவதும் கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலேயே நடத்தப்பட்டது. இலங்கையில் தமிழர்கள் மீது நிகழ்த்தப்பட்டப் போர்க்குற்றங்கள், மனித குலத்திற்கு எதிரான குற்றங்கள் வெளிப்படும் புகைப்படங்கள் காட்சிக்கும் வைக்கப்பட்டிருந்தன.


நிகழ்வில் கலந்துகொண்டு கருத்துக்களை பதிவு செய்தவர்கள்:
*மக்கள் ஜனநாயக முன்னணியைச் சேர்ந்த திரு.நகரிகரே ரமேஷ்
*கர்நாடகாவில் முக்கிய எழுத்தாளரும், சுயநிர்ணய உரிமை போராட்டங்களுகு ஆதரவாகத் தொடர்ந்து எழுதிவருபவருமான திரு.ஜி. இராமகிருஷணன்
*பெங்களூரூ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் திரு. பால் நியூமன்
*பெங்களூரு சட்டப் பல்கலைக் கழகத்தில் கெளவரவப் பேராசிரியராக பணியாற்றிவரும் மனித உரிமை ஆர்வலரான திரு.ஹரகோபால் (APCLC)
*புதிய சோஷலிச மாற்று இயக்கத்தைச் சேர்ந்த திரு.ஜெகதீஸ்
*காஷ்மீரைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் திரு.காலித் வாசிம்

********

Monday, June 27, 2011

ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக மெழுகுவர்த்தி ஏந்தல் நிகழ்வு

இடம்: மெரினா கடற்கரை, சென்னை
நாள்: ஜூன் 26, 2011.



சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாள் 
(International Day in Support of Victims of Tortured)

சித்திரவதைக்கு ஆளானோருக்கு ஆதரவு தெரிவிக்கும் சர்வதேச நாளான ஜூன் 26-ல், இலங்கையில் போர் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்துவரும் அடக்குமுறைகள் அட்டூழியங்களால் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கும் தமிழ் மக்களுக்காகவும், இலங்கை கடற்படையால் கொல்லப்பட்டும் வதைக்கப்பட்டும் துன்பங்களை அனுபவித்துவரும் தமிழ் மீனவர்களுக்காகவும், மெழுகுதிரி(மெழுகுவர்த்தி) ஏந்தி ஆதரவு தெரிவிக்கும் நிகழ்வு சென்னை மெரினா கடற்கரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வை முன்னிருந்து ஒருங்கிணைத்தது மே 17 இயக்கம்.

ஐயாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்ற இந்த நிகழ்வில், போரில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆதரவு தெரிவித்தும், போர்க்குற்றங்கள் புரிந்த ராஜபக்சே மற்றும் கூட்டத்தாரை சர்வதேச நீதிமன்றத்தின் முன் நிறுத்தக் கோரியும், ஈழத்தில் மக்கள் அமைதியாக வாழ வழிகளை ஏற்படுத்தக்கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன!



ஈழம் குறித்த எண்ணத்தோடு கூடியிருந்த அத்தனை ஆயிரம் மக்களுக்கு நடுவே அமர்ந்திருந்த அந்த உணர்வு, மிக உன்னதமாக இருந்தது. ஈழமக்களுக்கு ஆதரவு தெரிவித்து நடந்த பொதுநிகழ்வுகளில் நான் கலந்துகொண்ட முதலாவது நிகழ்வு இது. பாதிக்கு மேற்பட்டோர் முதல்தடவை வந்தவர்களாகத்தான் இருப்பார்கள் என நினைக்கிறேன்.



வேதனைகளை அனுபவிக்கும் மக்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கும் ராஜபக்சே மற்றும் இலங்கை பேரினவாதக் கூட்டத்திற்கு தகுந்த தண்டனையும், அடைபட்டிருக்கும் மக்களுக்கு இயல்பு வாழ்வுமே தற்காலத் தேவை, என்பது யாரும் சொல்லாமலே விளங்கியது!

இலங்கை பேரினவாதத்தின் சித்ரவதைகளை அனுபவிக்கும் நம் மக்களுக்க்கு 
ஆதரவாக, எந்த அரசியல் கட்சிகளின் தலையீடும் இன்றி இத்தனை ஆயிரம் மக்கள் ஒன்றுதிரண்டது, இன்னும் கொஞ்சம் நம்பிக்கையையும், ஏராளமான நெகிழ்ச்சியையும் கொடுத்தது!  


நல்ல ஒருங்கிணைப்பு:
எல்லோரும் பாராட்டும் விதத்தில் நிகழ்வை ஒருங்கிணைத்த இந்தக் குழுவிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டிய விசயங்கள் நிறைய இருக்கின்றன.

படங்கள்:
நண்பன் குமார். இன்னும் சில புகைப்படங்களுக்கான சுட்டி இங்கே!