Thursday, September 17, 2009

இன்று ஒரு தகவல் - நான் எடுத்த அவரது புகைப்படம்!

கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷ்ண மடத்தில்' பேசும்போது பார்த்தது.

  • உங்கள் பால்ய காலத்து நினைவுகளை அசைபோடும்போது என்னவெல்லாம் மனதில் வருகிறது?
  • எத்தனை மனிதர்கள் உங்கள் மனதில் ஆழமாகப் பதிந்திருக்கிறார்கள்?
  • நீங்கள் மிகவும் இரசித்த விசயம் எது?
  • சிறுவனாக/சிறுமியாக இருந்தபோது நீங்கள் நண்பர்களுடன் விவாதித்த சம்பவங்கள், செய்திகள் என்னென்ன?
**************

எனது சிறுவயதை நினைவு கூறும்போது முக்கியமாக நினைவுக்கு வருவது ரேடியோவும் தென்கச்சியும். நான் முதன் முதலாக ரேடியோவைக் கவனிக்க ஆரம்பித்தது, 1994-95 ஆம் வருடங்களில் - பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது.

தூத்துக்குடி வானொலி:
  • காலை 7 மணியில் இருந்து 7:15 வரை பக்திப் பாடல்கள் (இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம் சமய பக்திப் பாடல்கள் ஒவ்வொன்று, நேரம் மீதமிருந்தால் ஏதேனும் ஒரு மதத்திலிருந்து இன்னும் ஒரு பாடல்).
  • 7:15 - 7:25 செய்திகள் (டெல்லி அஞ்சல்).
  • 7:25 - 7:30 'இன்று ஒரு தகவல்'.
சில நாட்களில், 7:28க்கே, இன்று ஒரு தகவல் முடிந்துவிடும். அத்தனை குறுகியதாக இருந்தாலும், மிகப்பெரும் அறிவியல், சமூக, பண்பாட்டு தகவல்களை வாரி வழங்கிய அற்புத நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியில் வரும் அறிவியல் தகவல்கள்தான் தொடர்ந்து கேட்கும்படி செய்தன. காலையில் காஃபியுடன் 'இன்று ஒரு தகவலை'க் கேட்பதற்காகவே 'ஆகாசவாணி'யின் செய்திகளைக் கேட்டுக்கொண்டிருந்த காலம் அது. இன்று அறிவியல் செய்திகளில் நான் அதிக ஆர்வம் காட்டுவதற்கு அடிப்படையான காரணம் இதுதான்.


'அதிஷா'விற்கு வெகு காலத்திற்கு முன்பே ஜென் கதைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் தென்கச்சி. அவரை முதல் முதலாய் நேரில் பார்த்தது சென்னை புத்தகக் கண்காட்சியில் (2007 /2008 எது என்று நினைவில் இல்லை). அதன் பிறகு கடைசியாய் மயிலாப்பூர் 'இராம கிருஷண மடத்தில்'. 4-13-2008 அன்று 'இராமகிருஷ்ண மடம் பதிப்பகத்தின்' நூறாவது ஆண்டுவிழா' விற்குப் பேச வந்திருந்தார். நிகழ்ச்சி முடிந்ததும், படிக்கட்டில் அவர் (இன்னொருவர் கைத்தாங்கலாக) நடந்து செல்ல, அருகிலேயே நடந்து சென்றேன் . அவரோடு ஒருசில வார்த்தைகள் பேசவேண்டும் என்று தோணினாலும் ஏதையோ யோசிக்க (இங்கே சென்னையில்தானே இருக்கப்போகிறார், பின்னொருநாள் பார்த்துக்கொள்ளலாம் - என்ற உணர்வு) பிரமித்தபடியே நின்றிருந்தேன்.

பல வருடங்கள் வானொலியில் ஒலித்த குரல், எனக்கு மிக அருகே நடந்து சென்றது - எனக்குள் இருந்த, அவரை ரசித்த அந்த சிறுவனுக்கு எப்படி ஆச்சரியமும் பரவசமும் தராமல் இருக்க முடியும்?
சென்னைக்கு வந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்த ஒருசில தருணங்களில் அதுவும் ஒன்று.

அவர் அந்த நிகழ்ச்சிக்கு வரவிருந்தது முன்பே தெரிந்திருக்கவில்லை. மிச்சமிருந்த கொஞ்ச நஞ்ச பேட்டரியை வைத்து, எனது கேமிராவைப் பயன்படுத்தி அன்றைக்கு எடுத்த கடைசி புகைப்படம். (அவரை கிளிக்க மட்டுமே எஞ்சியிருந்ததோ என்னவோ?)



அழியாப் புகழ் தென்கச்சியின் குரலுக்கு!

5 comments:

Unknown said...

நீங்கள் அதிர்ஷ்டசாலி...
நான் அவரை கண்டது கூட இல்லை...

kalyan said...

I was Much more Lucky..

I had a chance to travel him in MTC bus last year from East Tambaram to Vellacherry.He sat right next to me.

Thankfully that day, There a heavy traffic jam and i had more than 1 hour to interact with him..

SRI DHARAN said...

அன்பு நண்பரே! வலை உலகிற்கு நான் புதிது. உங்கள் பயணங்களை படித்தேன் மிக அருமை. நானும் உங்களுடன் பயணிக்கலாமா ?

அடலேறு said...

தென்கச்சியின் கதைகளுக்கு நானும் ஒரு ரசிகன் தான் நண்பா. இனி என்று கிடைக்கும் இன்று ஒரு தகவல்

kick start said...

2008 book fair da